பூவே......


 இந்த பூவிற்கும் எனக்குமான பந்தம் பல வருடங்களை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான் சிறுமியாய் இருக்கும் பொழுது நட்ட செடி இது. வருடங்கள் பல உருண்டோடிய நிலையிலும், அழகாய் பூத்த வண்ணம் தன் சேவையை செவ்வனே ஆற்றிக்கொண்டிருக்கிறது.
 ஒரு நாள் மாலைப்பொழுதில் பள்ளி முடிந்து வந்தவுடன், நேரே வீட்டிற்கு அருகிலேயே இருக்கும், வாழை மரத்துக்கிடையில் புதிதாக நடப்பட்டிருந்த இந்த செடி, என் கவனத்தை மிகவும் ஈர்த்தது.
 எப்பொழுது பூக்குமோ என்று ஆசை ஆசையாக காத்திருந்த அந்த நாள் ஞாபகம், போனமுறை அம்மா வீட்டுக்கு சென்ற பொழுது, எதேச்சையாக பூவை படம்படித்தேன். பல பல ஞாபகங்கள் மனதில் முட்டி மோதி வந்தன.

தினமும் இதிலிருந்து பூக்களை பறித்து சாமிக்கு வைக்கும் என் தந்தையின் ஞாபகம் அலைமோதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்