வியாழன், 3 செப்டம்பர், 2015

அவல் கேசரி/ Poha kesari


அவல் உணவுகள் பெரும்பாலும் செய்வதுண்டு. ஆனால் முதன்முறையாக கேசரி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இக்கேசரியை sashiga kitchen வலைப்பூவிலிருந்து பார்த்து செய்தேன். நன்றிங்க மேனகா :)

 தேவையான பொருட்கள் :

அவல் ....1 கப்

சர்க்கரை......3/4 கப்

தண்ணீர்....4 கப்

குங்குமப்பூ....சிறிதளவு

ரோஸ் எசன்ஸ்....2 சொட்டு

ஏலக்காய்.....5

முந்திரி, திராட்சை...தேவையான அளவு

நெய்....3 மேசைக்கரண்டி

மஞ்சள்பொடி...ஒரு சிட்டிகை

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் லேசாக சூடாக்கவும்.

மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

பொடித்த அவலை வாணலியில் 1/2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி கலர் மாறாமல் வறுத்தெடுக்கவும்.

இன்னொரு வாணலியில் அரை மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்தெடுக்கவும்.

ஏலக்காயை தோல் நீக்கி, விதைகளை லேசாக வறுத்து பொடித்து வைக்கவும்.

வறுத்த அவலில் மெதுவாக நீர் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். மஞ்சள் பொடியை சேர்க்கவும்.

ஓரளவு கெட்டியான பதம் வந்தவுடன் சர்க்கரை போட்டு கிளறவும்.

பின்னர் குங்குமப்பூ, வறுத்த முந்திரி திராட்சையைப் போட்டு கிளறவும்.

பின்னர் ஏலக்காயை சேர்க்கவும். கூடவே ரோஸ் எசன்ஸ் விடவும்.

மீதி இருக்கும் நெய்யை விட்டு நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும்.








மிக விரைவில் செய்யக்கூடிய சுவையான அவல் கேசரி தயார்!.

சூடாக இருக்கும் போது இளகிய நிலையில் இருக்கும். ஆற ஆற கெட்டியான பதத்திற்கு வந்துவிடும்.

                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

 பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செயலிலும் எச்சரிக்கையாய் இரு, உன்னை பிறர் எடை போட்டுக் கூறுபவை அவையே.

                                                                 _((()))_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்