வியாழன், 29 ஜனவரி, 2015

புடலங்காய் குழம்பு

புடலங்காய்  குழம்பு:



இந்த குழம்பினை இரண்டு விதமான முறையில் வைக்கலாம்.  இது ஒரு முறை. இன்னொரு முறையை இன்னொரு முறை இன்னொரு பதிவாக போடுகிறேன் :)

தேவையான பொருட்கள்:

புடலங்காய்.........2

சின்ன வெங்காயம்.....200கிராம்

வறமிளகாய்........4 (காரத்திற்கேற்ப)

தக்காளி.............1

மஞ்சள்தூள்...........1/2 தேக்கரண்டி

உப்பு...................தேவையான அளவு


 வறுத்து அரைக்க:

கடலைபருப்பு........2மேசைக்கரண்டி

 வெள்ளை உளுந்துபருப்பு........1மேசைக்கரண்டி

சீரகம்................1தேக்கரண்டி

மிளகு...............1தேக்கரண்டி

மல்லி...........2மேசைக்கரண்டி

சோம்பு........1தேக்கரண்டி

பட்டை.......சிறுதுண்டு

கிராம்பு/இலவங்கம்.......2

தேங்காய்...........1/2 மூடி

கறிவேப்பிலை........4 இணுக்கு

கடலை எண்ணய்.....2 மேசைக்கரண்டி



தாளிக்க:

கடலை எண்ணைய்........1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்.....2

கறிவேப்பிலை.......2 இணுக்கு

சோம்பு.......1/2 தேக்கரண்டி

செய்முறை:

புடலங்காயை பொடியாக அரிந்து கொள்ளவும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு தக்காளையை போட்டு நன்கு வதக்கவும். 

காயிலிருந்து வரும் நீர் வரும்வரை கிளறி, பின்பு 1/2 டம்ளர் நீர்விட்டு  அடுப்பை சிம்மில் வைக்கவும்.

அரைக்க கொடுத்த பொருட்களை, வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த உடன் முதலில் கடலைப்பருப்பு, வெள்ளுழுந்து பருப்பு போட்டு வறுக்கவும். 

பின்பு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதற்கு பிறகு மிளகு, சீரகம், சோம்பு, பட்டை,கிராம்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். ஆறவிடவும்.

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

ஆறிய பொருட்களுடன் தேங்காயை போட்டு அரைத்து, அடுப்பில் இருக்கும் காயுடன் சேர்க்கவும். தேவையான அளவு நீர் விட்டு, உப்பு போடவும்.

குக்கரை மூடி இரண்டு சவுண்ட் விடவும்.

சுவையான புடலங்காய் குழம்பு தயார்.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.






புதினா எங்கள் வீட்டு புத்தம் புதிய புதினா :)

அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணியாகவோ, கெட்டியாகவோ வைத்துக்கொள்ளலாம்.
தாளிக்கும் போது பச்சைமிளகாய் இரண்டு சேர்த்து தாளித்தால் காரம் கூடுதலாக விரும்புவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.


                                                <><><><><><><><><><><><>


உனக்கு தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக் கொள்வதும், தெரியாததை தெரியாது என்று உணர்தலுமே தன்னம்பிக்கை.

கன்பூஷியஸ்.