புதன், 4 பிப்ரவரி, 2015

முளை கட்டிய பச்சைபயறு

ஒண்ணார மொளச்சிருக்கு



வாவ்வ்வ்!!!


முளைகட்டிய பயறு வகைகள் உடல்நலத்துக்கு மிகவும் நல்லதுனு நாம சிறிய வயதிலிருந்தே படிச்சிருப்போம்.

 அதை எப்படி செய்வதுனு தெரியாமலே நிறைய நாட்கள் இருந்திருக்கேன்.

அப்புறம் படிப்படியா புத்தகம், வலைத்தேடல் மூலமா தெரிஞ்சுக்கிட்டு, தானியங்களை முளைகட்டி குழம்பு வகைகளாகவும், ஆவியில் வேகவைத்து தாளித்தும் உண்டதுண்டு. இப்பலாம் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவதுண்டு.
பொதுவா பச்சைபயறு எளிதா முளைவிட்டுவிடும். சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

பயறை இரவு நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதிலுள்ள நீரை வடித்து விட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் அன்று மாலையே லேசாக முளைவிடத் தொடங்கிவிடும். மாலை நேரத்தில் வெங்காயம் ,மிளாகய் போட்டு தாளித்து குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்.


எப்ப நெட் ஓபன் பண்ணாலும் sprout maker விளமபரம் கண்ணுக்கு தட்டுப்பட்டுக்கிட்டே இருந்துச்சு.

சரி அப்படி என்னதான் இருக்கும் வாங்கி பார்க்கலாமேனு, வாங்கி அதில பச்சை பயறையும், கொள்ளையும் இரண்டு அடுக்களிலும் தனித்தனியாக நீர் ஊற்றி வைத்தேன்.

11/2 நாள் கழிச்சு பாத்தா லேசா பச்சை பயறுல வெள்ளையாக முளைப்பு தென்பட ஆரம்பிச்சது.
அதுக்கு முன்னாடியே பல தடவை திறந்து திறந்து பார்த்தோம்னு வெய்ங்க, அதெல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான் இல்லீங்களா?

ஒரு வழியா இன்னிக்கு காத்தால எடுத்து திறந்து வெக்கும் போது லேசா அங்கொண்ணும் இங்கொண்ணுமா தென்பட்ட முளைப்பு கட கடனு வளர ஆரம்பிச்சிட்டுது!!!.
அட நிசமாதாங்க!!!  இதோ நீங்களே பாருங்களேன்!!!

Sprout maker





ஸ்பரவுட் மேக்கர்:

நான் இந்த மேக்கர ஏதோ சாண்ட்விச் மேக்கர், டோனட் மேக்கர் இப்படிலாம் போல இருக்கு. உள்ள பயறை போட்டு ஸ்விட்ச் போட்டா, முளைச்சிடும்னு நினைச்சேன்.
ஹீ ஹீ நமக்கு அறுவு அம்புட்டுதே!! கோழிகுஞ்சு பொரிக்கிற மிஷின்லாம் இருக்கிறப்ப....இதுக்கு ஒண்ணு கண்டுபிடிக்காமலா இருப்பாங்கனு நெனச்சிட்டேன்.

இது 3 அடுக்குகளை கொண்ட ஒரு பிளாஸ்டிக் டப்பா. முதல் அடுக்கில் ஒரு பயறும், இரண்டாம் அடுக்கில் வேறு ஒரு பயறும் போட்டு ஊறவெக்கலாம். கடைசி அடுக்கு காலியா விடணும்.

நான் 2ஆம் அடுக்கில் கொள்ளு போட்டிருந்தேன், ஆனா அது அவ்வளவா முளைக்கும் திறன் எய்தல.
ஒருநாள் கழிச்சு பார்த்தா, தண்ணியெல்லாம் உறிஞ்சி இருக்கும். கீழே அதாவது கடைசி தட்டில் மிக சொற்பமான அளவே தண்ணீ ர் இருந்தது.

ஆனாலும் எங்க பயறு காஞ்சு போய்டுமோனு இடைல அதாவது ஒருநாள் முடியும் தருவாயில் ஒரு அரை டம்ளர் தண்ணி ஊத்தி, மறுக்கா அதே போல மூடி வெச்சுட்டேன்.
அதுக்கப்புறமும் ஒரு முறை திறந்து பார்த்து லேசா கிளறுனாப்பில பண்ணேன். ஏனா எதாச்சி பூசணம் கீசணம் புடுச்சுடுமோனு ஒரு பயம்.

கிட்டத்தட்ட 2 நாள் ஆகிடுதுனு வெய்ங்களேன்.

நான் போட்டது ரொம்பவே புரியலேனா இதுக்கான விளக்கப்படம் யூ ட்யூப்ல இருக்கு, தேடி பாத்திடுங்க  இந்த டப்பா வாங்கும் முன்னாடி.

தானியங்களை முளை கட்டுவது பெரிய வித்தைனு நினைச்சிருந்த எனக்கு, இவ்வளவு எளிதான விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.  "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"

                                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்கள் மனதை உறுதியாக உற்சாகமுடன் ஊக்கமாக வைத்திருங்கள் ;
வெற்றி தானாக தேடி வரும்.

                                                    _()_()_()_()_




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்