இட்லி செய்வது எப்படி? னு மட்டுமே பார்த்தா போதுமா, என்னையும் கொஞ்சம் உலக உலா அழைத்துச் செல்லேன் என்ற இட்லிப்பூவின் வேண்டுகோளை சிரமேற்க் கொண்டு இதோ இங்கே காற்று வெளியினிலே கவிதை பாட விட்டுள்ளேன்.
![]() |
நிலவுக்கு மட்டும்தான் அழகு நடை பயில வானம் சொந்தமா என்ன, நாங்களும் நீ தொட்டு விடும் தூரம்தான் என வான மகளிடம் சொல்லாமல் சொல்கின்றதோ இப்பூங்கொத்து!! |
![]() |
வானத்தப் பார்த்தேன்!! |
![]() |
பூமியப் பார்தேன்!! |
![]() |
நீலவானத்தை வெண்மேகம் அலங்கரிக்க, நானும் அதற்கு சளைத்தவளில்லைனு சிவப்பூம், பச்சையும் கலந்து அழகை அள்ளித்தெளிக்கின்றன இம்மலர்கள் :) |
இட்லிப்பூ இந்த மழைக்கதுக்கும் ரொம்ப ரொம்ப அழகா பூத்து பூத்து குலுங்குது.
பார்க்க பார்க்க பரவசம்!! இத்தனைக்கு ரொம்ப ஒண்ணும் பெரிசா கவனிச்கிறதே இல்லீங்க, சொல்லபோனா சுத்தமா கண்டுக்கிறதே இல்ல, உரம் வெச்ச ஞாபகமே இல்ல, தண்ணி மட்டும் ஊத்தறதோட சரி..அதுக்கே இவ்வளவு அழகு காட்டி, மனதை புத்துணர்வாக்குது பாருங்களேன்!! ரொம்ப ரொம்ப நன்றி இட்லியக்கா !!
இதனோட அழகுல மயங்கி போனவாரம் வீட்டுக்கு வந்த நட்பூ குழாம், எங்கிட்ட கேக்காமயே படக்குனு 2 பூவ பறிச்சிட்டாங்க. ஒரு நிமிசம் இல்லீங் ஒரு நாள் பூரா திடுக்குனு இருந்துச்சு. இருந்தாலும் சுதாரிச்சுக்கிட்டேன்.
வேறென்ன செய்ய முடியும் நீங்களே சொல்லுங்க!! ஒருவேளை அம்மலர் சாமிக்கு போயிருக்கலாம், இல்லேனா அவங்க வீட்டு வரவேற்பரைக்கு அலங்காரமா அமர்ந்திருக்கலாம் இல்லீங்களா?
அதுனால இதெல்லாம் சகசமப்பூனு மனச தேத்திக்கிட்டு, மலர்தானே மீண்டும் மலராமலா போய்டும்னு ஜமாதானமாகிட்டேன்!!
நல்ல வேளை அப்பதான் போட்டோ புடுச்சிருந்தேன்..
![]() |
இவிங்கதான் அவிங்க!! நல்லா சிவப்பு நிற பந்து போல அழகா இருந்தாங்க!! |
சிலர் வீட்டுக்கு வெளியில் வைக்கும் அரளியில் மலர் கொய்துவார்கள், அதனை வேண்டாமென நினைக்கும் மனமும் உண்டு, இல்லை சாமிக்குத்தானே யார் கொண்டு சென்றால் என்ன என நினைப்பவர்களும் உண்டு.
சிலருக்கு நல்லதாக தோன்றும் விசயம் சிலருக்கு தீயதாக தோன்றும். அதுனால எப்பவும் ஒரே கோணத்தில சிந்திக்காம நாணயத்திற்கு இரண்டு பக்கமுண்டுனு எண்ணி வாழவேண்டும். இது எனக்கு நானே சொல்லிக்கிறனுங்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
நன்மை ஒரு வைத்தியன்; தீமை, சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.
_((()))_