பழஞ்சக்கரை என்ற சக்கரபழம் இது ஒரு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் உணவாகத்தான் எனக்கு தோன்றியது. பள்ளி முடிஞ்சு வந்ததும் அப்பலாம் இப்போ போல ஸ்னாக் ரெடியா இருக்காது. எப்பவாச்சும் முறுக்கு சுட்டுட்டு இருப்பாங்க அம்மா. அன்றைய தினம் அப்படியே பெருமிதம் நிறைஞ்ச தினமா தோணும் எனக்கு.
சில நாட்கள் பருப்பு வடை காத்திருக்கும். இல்லேனா போண்டா இருக்கும். அதெல்லாம் சொல்லாமல் சொல்லிச்செல்லும் விசயம் என்னனா? உங்கூட்டுக்கு இன்னிக்கு ஒரம்பரை வந்துட்டு போயிருக்கு என்பதாகத்தான் இருக்கும்.
அப்பரமென்ன சந்தோசத்துக்கு கேட்கவா வேணும். வந்த ஒரம்பரை நிச்சயம் எதாவது வாங்கிட்டுத்தான் வந்திருப்பாங்க.
கூட இந்த வடை, போண்டா ...ஆஹா ஓஹோ!! குட்டி போட்ட பூனையாட்டம் சோறாக்குர ஊட்டுக்கும் (சமையலறையை சோறாக்குற ஊடுனுதான் சொல்வோம்) ஆசாரத்துக்கும் (ஹால்தான் ஆசாரம்...நாட் மடிஆச்சாரம்...இது ஆசாரம்) நடை பயின்றவாறே இருக்கவேண்டியதுதான்.
பழஞ்சக்கரைய பேசப்போயி எங்கெங்கியோ சுத்திட்டு இருக்கேன் பாருங்க!!
பழஞ்சக்கரைதான் அப்போதைய பிரபலமான ஈவினிங் ஸ்னாக்.. பழம்லாம் சீப்பு சீபாலாம் வாங்கி பயன்படுத்துறது கிடையாது.
ஒரு தார் வாழைப்பழத்தை பழுக்க வெச்ச.. கட்டி விட்டுடுவாங்க எங்கப்பா.
அப்புறம் என்ன போகைல வரைல பிச்சு பிச்சு உரிச்சு சாப்பிட்டுட்டு..தோலை ஆட்டுக்குட்டிக்கு கொடுத்துவேன். எவ்வளவு தாராளம் பாருங்க!!
ம்ஹுக்கும் மறுக்கா வேறெங்கியோ போறேன் பாருங்க!!
இப்ப நெசமாலுமே விசித்துக்கு வாரேங்க!! அப்ப இதுவரைக்கும் சொன்னதெல்லாம் பொய்யானு கேட்கப்படாது!! அதும் நெசம்தான்.
பழஞ்சக்கரை அல்லது சக்கரபழம்
தேவையான பொருட்கள்:
பூவன்பழம்....2 (விருப்பட்ட பழம் சேர்க்கலாம்)
நாட்டுச்சர்க்கரை........2 மேசைக்கரண்டி (இனிப்புக்கேற்ப)
தேன்..........1 தேக்கரண்டி (விருப்பட்டால்)
பேரீச்சம்பழம்.....4
சுடுசாதம்.....2 கரண்டி
நெய்.......1 மேசைக்கரண்டி(விரும்பினால்)
செய்முறை:
மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து பரிமாற வேண்டியதுதான்.
மிகவும் சுவையாக இருக்கும். பெரிவீங்க, சின்னவீங்க பாகுபாடெல்லாம் பார்க்காம ரசித்து ருசித்து சாப்பிடலாம்.
என் மகனுக்கும், மகளுக்கு மேற்சொன்ன கதைய சொல்லி இந்த பலகாரத்தை (ஸ்பெஷலா எது செய்தாலும் பலகாரம்னுதே சொல்வோம்) செய்து கொடுத்தேன். நல்லா இருக்குனு சொன்னாங்க :)
சுவைத்து பார்த்து சொல்லுங்க எப்படி இருந்துச்சுனு!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
பிறரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்; அது உங்கள் உள்ளத்தின் மதிப்பைக் குறைக்கும்.
_((()))_
சில நாட்கள் பருப்பு வடை காத்திருக்கும். இல்லேனா போண்டா இருக்கும். அதெல்லாம் சொல்லாமல் சொல்லிச்செல்லும் விசயம் என்னனா? உங்கூட்டுக்கு இன்னிக்கு ஒரம்பரை வந்துட்டு போயிருக்கு என்பதாகத்தான் இருக்கும்.
அப்பரமென்ன சந்தோசத்துக்கு கேட்கவா வேணும். வந்த ஒரம்பரை நிச்சயம் எதாவது வாங்கிட்டுத்தான் வந்திருப்பாங்க.
கூட இந்த வடை, போண்டா ...ஆஹா ஓஹோ!! குட்டி போட்ட பூனையாட்டம் சோறாக்குர ஊட்டுக்கும் (சமையலறையை சோறாக்குற ஊடுனுதான் சொல்வோம்) ஆசாரத்துக்கும் (ஹால்தான் ஆசாரம்...நாட் மடிஆச்சாரம்...இது ஆசாரம்) நடை பயின்றவாறே இருக்கவேண்டியதுதான்.
பழஞ்சக்கரைய பேசப்போயி எங்கெங்கியோ சுத்திட்டு இருக்கேன் பாருங்க!!
பழஞ்சக்கரைதான் அப்போதைய பிரபலமான ஈவினிங் ஸ்னாக்.. பழம்லாம் சீப்பு சீபாலாம் வாங்கி பயன்படுத்துறது கிடையாது.
ஒரு தார் வாழைப்பழத்தை பழுக்க வெச்ச.. கட்டி விட்டுடுவாங்க எங்கப்பா.
அப்புறம் என்ன போகைல வரைல பிச்சு பிச்சு உரிச்சு சாப்பிட்டுட்டு..தோலை ஆட்டுக்குட்டிக்கு கொடுத்துவேன். எவ்வளவு தாராளம் பாருங்க!!
ம்ஹுக்கும் மறுக்கா வேறெங்கியோ போறேன் பாருங்க!!
இப்ப நெசமாலுமே விசித்துக்கு வாரேங்க!! அப்ப இதுவரைக்கும் சொன்னதெல்லாம் பொய்யானு கேட்கப்படாது!! அதும் நெசம்தான்.
பழஞ்சக்கரை அல்லது சக்கரபழம்
தேவையான பொருட்கள்:
பூவன்பழம்....2 (விருப்பட்ட பழம் சேர்க்கலாம்)
நாட்டுச்சர்க்கரை........2 மேசைக்கரண்டி (இனிப்புக்கேற்ப)
தேன்..........1 தேக்கரண்டி (விருப்பட்டால்)
பேரீச்சம்பழம்.....4
சுடுசாதம்.....2 கரண்டி
நெய்.......1 மேசைக்கரண்டி(விரும்பினால்)
செய்முறை:
மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து பரிமாற வேண்டியதுதான்.
மிகவும் சுவையாக இருக்கும். பெரிவீங்க, சின்னவீங்க பாகுபாடெல்லாம் பார்க்காம ரசித்து ருசித்து சாப்பிடலாம்.
என் மகனுக்கும், மகளுக்கு மேற்சொன்ன கதைய சொல்லி இந்த பலகாரத்தை (ஸ்பெஷலா எது செய்தாலும் பலகாரம்னுதே சொல்வோம்) செய்து கொடுத்தேன். நல்லா இருக்குனு சொன்னாங்க :)
சுவைத்து பார்த்து சொல்லுங்க எப்படி இருந்துச்சுனு!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
பிறரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்; அது உங்கள் உள்ளத்தின் மதிப்பைக் குறைக்கும்.
_((()))_
பழஞ்சக்கரை பார்க்கவே அருமையா இருக்கு அருள். சின்ன வயசுல பாட்டி வீட்ல இதையே சாதத்திற்க்குப் பதிலா ஊற வைத்த பச்சரிசியோட கைகளால் பிசைந்து இதை செய்து தருவாங்க , அமிர்தமா ருசியிருக்கும். நியாபகம் வந்துட்டுது. இங்கு சாதா வாழைப் பழம் தான் கிடைக்கும். இதேப் போன்று செய்துப் பார்த்துட்டு சொல்றேன். :)))
பதிலளிநீக்குவாணி உங்களோட கருத்துக்களை தெரிவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்வையும் மேன்மேலும் எழுதும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மிக்க நன்றி :)
நீக்கு