திங்கள், 31 ஆகஸ்ட், 2015

தினை தக்காளி சாதம்

தினை தக்காளி சாதம் சுவையும், சத்தும் நிறைந்த எளியவகை சமையல்!

தேவையான பொருட்கள்:

தினை அரிசி.....1 கப்

தக்காளி...4

பெரியவெங்காயம்...2

இஞ்சி...ஒரு அங்குல துண்டு

பூண்டு...10 பல்

கறிவேப்பிலை...2 இணுக்கு

மல்லிதழை கைப்பிடியளவு

வறமிளகாய்....2

சீரகம்...1/2 மேசைக்கரண்டி

உப்பு...தேவையான அளவு

மஞ்சள் பொடி...சிறிது

எண்ணைய் தாளிக்க







தினை அரிசியை நன்கு கழுவி 1க்கு 3 என்ற விகிதத்தில் நீர் விட்டு குக்கரில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.

பெரியவெங்காயத்தை சன்னமாக நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வறமிளகாயை பொடிப்பொடியாக கிள்ளி, விதைகளை அகற்றிவைக்கவும்.
இஞ்சி, பூண்டினை தோலுரித்து நன்கு தட்டி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளியைப் போட்டு குழைய வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்பு இக்கலவையை குக்கரில் வெந்த தினை சாதத்துடன் போட்டு நன்கு கிளறவும். மல்லி இலை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
மல்லி இலைக்கு பதிலாக புதினாவும் சேர்க்கலாம். நான் புதினா சேர்த்துதான் சமைத்தேன்.


சுவையான தினை தக்காளி சாதம் தயார்!

                                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

சுவாமி. விவேகானந்தர்

                                                             _((()))_ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்