இந்த சட்னி காரசார விரும்பிகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாங்க கொஞ்சம் காரம் கொறச்சலா போட்டு சாப்பிட்டே பழகிவிட்டதால், முதல் முறை அரைத்த பொழுது கண்ணீர் மல்க சாப்பிட்டோம்.
இதுல சொல்றதுக்கு என்னங்க இருக்கு, சர்க்கர கொஞ்சம் வாயில போட்டுத்தான் கண்ணீரை நிறுத்தனோம்னா பாருங்களேன்.
சோ சிம்பிள்ங்க... பூண்டு பத்தோ, பதனஞ்சோ எடுத்து தோல உரிச்சுக்கணும். இந்த சட்னி தயாரிப்புல நேரம் பிடிக்கும் வேலைனா இது மட்டும்தான்.
தக்காளி..நாலெடுத்து இரண்டா வெட்டிக்கணும்.
வறமிளகாய் அவிங்கவிங்க வீட்டு காரத்துக்கேற்ப நான் மூணுதான் போட்டேன்.
இந்த மூணையும் மிக்ஸி ஜார்ல போட்டு அரைச்சுக்கணும்.
ஒரு வாணலிய அடுப்பில வெச்சு காஞ்சவுடனே, கடலெண்ணைய் துளி ஊத்தி கடுகு, சீரகம் போட்டு வெடிச்ச உடனே கறிவேப்பிலை போடணும்.
உடனே அரைச்சத போட்டு(ஊத்தி) தேவையான அளவு உப்பு போட்டு அலாசி உடணும்.
அப்பிடியே அலாசிட்டே இருந்தம்னா, கொஞ்சங்கொஞ்சமா தண்ணி சுண்டி (தக்காளில இருக்கும் தண்ணியே போதும்) கிளறுற பதம் வரும்.
இந்த மாதிரி வந்த உடனே அடுப்பை நிறுத்திப்போட்டு, ஒரு சின்ன குண்டால ஊத்தி வெச்சுட்டு, வடசட்டிய கழுவி வெச்சுடணும். (ஸ்ஸ்ஸப்பா முடில...:))).
சட்னிய எடுத்து தோசைக்கோ, இட்லிக்கோ தொட்டு சாப்பிட்டா அவ்வளவு நல்லா இருக்கும். கொள்ளு இட்லியும், தக்காளி சட்னியும் கூட்டணி அமைத்து இருக்காங்க.
இட்லியக் கொன்ன பெரும என்னையத்தான் சாரும்னு எங்கூட்டு சனம்லாம் வாய்கொள்ளாம பாராட்டுன விசயத்தையெல்லாம் நான் உங்க கிட்டலாம் சொல்வேனு மட்டும் நினச்சுப்போடாதீங்க ஆமா..!! :))
கொள்ளு தோசை,கொள்ளு இட்லி . இந்த லொள்ளுஇட்லி சாரி கொள்ளு இட்லி உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
பின் குறிப்பு:
பெங்களூரு தக்காளினா சின்ன நெல்லிக்கா அளவுக்கு புளி சேர்த்துக்கோங்க. நாட்டு தக்காளினா புளி போட வேண்டியதில்ல. அதுக்கு மீறி நாங்க புளிப்பு உரைப்புமாத்தான் அரைப்போம்னா, விருப்பத்திற்கேற்ப சேர்த்துக்கோங்க.
படித்ததில் பிடித்தது:
அறியாமை வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமை அதை விடப் பெரிய வெட்கக்கேடாகும்.
-பெஞமின் ஃப்ராங்க்ளின்.
_((()))_.
இதுல சொல்றதுக்கு என்னங்க இருக்கு, சர்க்கர கொஞ்சம் வாயில போட்டுத்தான் கண்ணீரை நிறுத்தனோம்னா பாருங்களேன்.
சோ சிம்பிள்ங்க... பூண்டு பத்தோ, பதனஞ்சோ எடுத்து தோல உரிச்சுக்கணும். இந்த சட்னி தயாரிப்புல நேரம் பிடிக்கும் வேலைனா இது மட்டும்தான்.
தக்காளி..நாலெடுத்து இரண்டா வெட்டிக்கணும்.
வறமிளகாய் அவிங்கவிங்க வீட்டு காரத்துக்கேற்ப நான் மூணுதான் போட்டேன்.
இந்த மூணையும் மிக்ஸி ஜார்ல போட்டு அரைச்சுக்கணும்.
ஒரு வாணலிய அடுப்பில வெச்சு காஞ்சவுடனே, கடலெண்ணைய் துளி ஊத்தி கடுகு, சீரகம் போட்டு வெடிச்ச உடனே கறிவேப்பிலை போடணும்.
உடனே அரைச்சத போட்டு(ஊத்தி) தேவையான அளவு உப்பு போட்டு அலாசி உடணும்.
அப்பிடியே அலாசிட்டே இருந்தம்னா, கொஞ்சங்கொஞ்சமா தண்ணி சுண்டி (தக்காளில இருக்கும் தண்ணியே போதும்) கிளறுற பதம் வரும்.
இந்த மாதிரி வந்த உடனே அடுப்பை நிறுத்திப்போட்டு, ஒரு சின்ன குண்டால ஊத்தி வெச்சுட்டு, வடசட்டிய கழுவி வெச்சுடணும். (ஸ்ஸ்ஸப்பா முடில...:))).
சட்னிய எடுத்து தோசைக்கோ, இட்லிக்கோ தொட்டு சாப்பிட்டா அவ்வளவு நல்லா இருக்கும். கொள்ளு இட்லியும், தக்காளி சட்னியும் கூட்டணி அமைத்து இருக்காங்க.
இட்லியக் கொன்ன பெரும என்னையத்தான் சாரும்னு எங்கூட்டு சனம்லாம் வாய்கொள்ளாம பாராட்டுன விசயத்தையெல்லாம் நான் உங்க கிட்டலாம் சொல்வேனு மட்டும் நினச்சுப்போடாதீங்க ஆமா..!! :))
கொள்ளு தோசை,கொள்ளு இட்லி . இந்த லொள்ளுஇட்லி சாரி கொள்ளு இட்லி உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
பின் குறிப்பு:
பெங்களூரு தக்காளினா சின்ன நெல்லிக்கா அளவுக்கு புளி சேர்த்துக்கோங்க. நாட்டு தக்காளினா புளி போட வேண்டியதில்ல. அதுக்கு மீறி நாங்க புளிப்பு உரைப்புமாத்தான் அரைப்போம்னா, விருப்பத்திற்கேற்ப சேர்த்துக்கோங்க.
படித்ததில் பிடித்தது:
அறியாமை வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமை அதை விடப் பெரிய வெட்கக்கேடாகும்.
-பெஞமின் ஃப்ராங்க்ளின்.
_((()))_.