புதன், 13 மே, 2015

குயிலே...குயிலே..!!


என்னடா இது குயில்னு தலைப்பு கொடுத்து காக்காவ போட்டிருக்கனேனு பார்க்கிறீங்களா? ஹைய்யா!! அப்ப நீங்களும் ஏமாந்து போனீங்களா??

நான் யார்? நான் யார்??
தண்ணி குடிக்கும் போதும் அதே யோசனையா இருக்கு

  நம்மள மட்டும் இந்த கடவுள் ஏந்தான் இப்படி படைச்சாரோ..காரணம் இல்லாமய இப்படி படைச்சிருப்பாரு..!! 

என்னை விட சின்னவங்களாம் கூடு கட்டி குடியேறுறாங்க..ஆனா எனக்கு மட்டும் இஞ்சினீர் மூளைய படைக்காம விட்டுட்டாரே..
நாந்தான் குயிலக்கா...

அவர போயி குயிலக்கா குயிலக்கானு கூப்புடறதை வன்மையா கண்டிக்கிறேன்.. வேணா குயிலண்ணேனு கூப்பிடுங்க..(ஹூம் இத தெரிஞ்சுக்க இத்தன நாள் ஆகிடுச்சு)
(குயிலக்கா போட்டோ எப்பவோ எடுத்தது, அதும் கண்ணாடிக்குள்ள இருந்து)

ஆமாங்க மேல கண்ணு ரெண்டும் தக தகனு அக்னி குண்டாட்டம் மின்னுகிறவருதான் ஆண்பால். அவர்தான் கூவூ....கூவூ னு கூவுறவுரு.

இந்த க்ரே கலர்ல புள்ளி வெச்ச உடையணிஞ்சவங்க அவுங்கூட்டு அம்மிணி.
இது தெரியாம இத்தன நாளா இருந்திருக்கேன். அம்மிணிக்கு அவ்வளவா குரல்வளம் இல்லையாம்.


இவங்களைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்க வேணும்னா இங்கே பறந்து செல்லவும்.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


படித்ததில் பிடித்தது.

வீண்பேச்சு பேசாதீர்கள். வாதம் செய்வதில் திறமை பெற்றவர்கள், தங்களுடைய தவறை உணர முடிவதில்லை. அவர்களின் திறமை பொய்மைக்கு முகமூடி மாட்டவே முயல்கின்றது.

அரவிந்தர்.

                                                           _()()()()_




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்