![]() |
உன்னோட பெருமைய உலகமே பேசுதாமே!! |
![]() |
என்னப் பத்தியும் எதாச்சும் எடுத்து சொல்லேன் |
கொக்குக்கும் வெண்ணைய்க்கும் என்ன சம்பந்தனு கேட்காதீங்க!! கொக்கு தலைல வெண்ணையே வெக்காம சமத்தா போட்டோவுக்கு நின்னாங்க!!
நெய் வேவிக்கும் வித்தையை காணலாம் வாங்க!!
பாலை தயிர் ஆக்கி, அத்தயிரிலிருந்து வெண்ணைய் எடுத்து,
அவ்வெண்ணையை சுத்தமான வாணலியில் போட்டு, அடுப்பை மிகவும் குறைவாக எரியவிடவேண்டும். அதாங்க சிம் ல.
கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணைய் உருகி, மேலே நுரை தளும்ப ஆரம்பிக்கும்.
நுரை அடங்கி வரும் தருவாயில் முருங்கை கீரை (கொழுந்து) அல்லது கறிவேப்பிலை கொழுந்தினைப் போட்டு, 3 நிமிடங்கள் விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
நெய் வேகும் பொழுது கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. அதிக தீயில் வேகவிட்டாலோ, இல்லை நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, தீய்ந்து போவதோடு மட்டுமல்லாமல், எளிதில தீப்பற்றும் வாய்ப்புண்டு. கவனமாக செயல்பட வேண்டும். மிகவும் சிறிய பாத்திரத்தில் வைத்தும் வேகவிடக்கூடாது.
காய்ச்சும் போது கரண்டியினால் கலக்கவோ , மேலே நுரைத்து வருவதை அள்ளி எடுக்கவோ கூடாது.
நெய்யை வடித்த பிறகு அடியில் தேங்கியிருக்கும் நெய்யில் சாதம் போட்டு அல்லது கோதுமை மாவினை போட்டு கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
நான் பருப்பு சாதத்தை போட்டு பிசைந்து விட்டேன்.
சுத்தமான பாத்திரத்தில், நெய்யை வடித்துக் கொள்ள வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லை. சுத்தமான நெய் கெட்டுப்போகாது.
![]() |
தக தகவென தங்கத்தை கரைத்தாற் போலமின்னுகிறது :)) |
![]() |
தேவைக்கு இந்த நெய் ஜாடியில் வைத்துக்கொள்வது வழக்கம். |
![]() |
![]() |
![]() |
ஆறியபின்பு இது போல துணிந்துவிடும் |
![]() |
இப்ப இங்கிருக்கிற தட்பவெப்ப நிலைக்கு காய்ச்சி 15 நிமிடத்திற்குள்ளாக இப்படி ஆகிவிட்டது. |
நெய்யினால் உடல்நலக்குறைவு என்பது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போதுதான் உண்டாகும்.
தினமும் உருக்கிய நெய்யை (1 தேக்கரண்டி) மதிய உணவில் உட்கொண்டு வந்தால் குடல் நோய்கள் அண்டாது.
குழந்தைகளுக்கு சாப்பிட ஆரம்பிக்கும் பருவத்தில் உப்பு பருப்பும் நெய்யும் கொடுப்பது வழக்கம்.
அசைவ உணவு உண்ணாதவர்களுக்கு மீனில் உள்ள ஒமேகா 3 இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புள்ளதால், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட நெய்யை பயன்படுத்லாம்.
கண்பார்வைக்கும், நரம்பு கோளாறுகளுக்கும் நெய் ஒரு அருமருந்து.
சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் நெய்யை முக்கியமான இடத்தில் வைத்துள்ளன.
பசுவிலிருந்து பாலாகி தயிராகி வெண்ணைய்யாகி கடைசியில் நெய்யாக மாறிய விந்தை பலதையும் சிந்திக்க வைக்கிறது.
இத்தருணத்தில் கோமாதாவிற்கு நன்றியறிதலையும் செலுத்துவோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
பகட்டான பேச்சை நம்பி ஏமாந்து விடக்கூடாது. ஒரு போதும் அறிவு மயங்கிவிட அனுமதிக்க கூடாது.
கண்களை திறந்து உலகத்தைப் பாருங்கள். அப்போது இழிவானது என்று எந்த ஒரு பொருளும் உலகத்தில் இருப்பதாகத் தெரியாது.
குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள், கீழ்த்தரமான விஷயங்களைப் புறந்தள்ளுங்கள். வானத்தைக் காட்டிலும் பெரிதாக விரிவடையுங்கள்.
அரவிந்தர்.
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்