வெள்ளை ரவை உப்மா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்னவருக்கோ அதனை பிடிக்காது. கோழி தீவனம் என்று பெயர்சூட்டி மகிழ்வார். ஆனால் அவருக்கு கோதுமை ரவை உப்மா என்றால் கொள்ளை ப்ரியம்.
வெள்ளை ரவை உப்மா அவ்வளவா உடலுக்கு நல்லதில்லையாமே!?
போன வாரத்தில் ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருந்த சமயம் உப்மா செய்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். இந்த வெள்ளை ரவை உப்மா விசயத்தில் என் மகள் என் கட்சி :) கோதுமை ரவை உப்மா அம்மிணிக்கு புடிக்கவே புடிக்காது :)))
எதுவுமே சாப்பிடற மெத்ட் ஒண்ணு இருக்கில்லையா? சாப்பிடற மெத்ட்னா, நேரா வாயில போடாம தலைய சுத்தியானு கேட்கப்படாது. அதாவது உப்மாவில் நிறைய நெய் விட்டுக்கணும்.
தொட்டுக்கொள்ள அஸ்கா சக்கரை அளந்து போடாம கொஞ்சம் தாராளமா வெச்சு அதை தொட்டு தொட்டு சாப்பிட்டா, அந்த சுவையே அலாதிதான் :))
இப்ப உப்மா எப்படி செய்வது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளைரவை...........1கப்
தண்ணீர்............................2 1/4 கப்
சின்னவெங்காயம்......15 எண்ணிக்கை
பச்சமிளகாய்.................2 (விதைகளை கண்டிப்பாக எடுத்துவிடவேண்டும்)
இஞ்சி................................சிறுதுண்டு
கறிவேப்பிலை..........2 இணுக்கு
கேரட்..............................2(சிறியதாக இருப்பின் இல்லேனா 1)
தக்காளி.........................1
கடலை எண்ணைய்...............2மேசைக்கரண்டி
கடுகு..........................1/2 தேகரண்டி
கடலைபருப்பு.........1மேசைக்கரண்டி
செய்முறை:
சின்ன வெங்காயத்தை குறுக்குவாட்டில் இரண்டாக வெட்டவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கில் 4 ஆக வெட்டவும்.
கேரட்டை பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் கடலை எண்ணைய் ஊற்றி
எண்ணய் காய்ந்தவுடன் கடுகு, கடலைபருப்பை போடவும்.
கடுகுவெடித்து கடலைபருப்பு சிவந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
வதங்கிய உடன் கேரட் போட்டு 1நிமிடம் வதக்கி தக்காளியை போடவும்.
பிறகு இஞ்சி போடவேண்டும்.
இவை எல்லாம் வதங்கிய பின்பு அளந்து வைத்த நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்த உடன் ரவையை தூவினாற் போன்று போட்டுக்கொண்டே கிளறவேண்டும்.
நன்கு சுருண்டு வரும் சமயம் 2 தேக்கரண்டி நெய்விடவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள மேற்சொன்னதையும் பின்பற்றலாம். தயிரும் நன்றாக இருக்கும்.
தேங்காய் சட்னி அல்லது சாம்பார் பொருத்தமாக இருக்கும்.
ஏதேனும் வேலை இருந்தாலோ, முடியாத சமயமோதான் இதனை செய்வது உண்டு.
சாம்பார் வைக்கும் அளவிற்கு நேரம் இருப்பின் நாம் ஏன் இதனை செய்யப்போறோம்.
ஆனா என்ன ஒரு சிலருக்கு இதெல்லாம் வைத்தால்தான் இவ்வுணவு பூரணத்துவம் அடைந்ததாக கூறுவர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உயர்ந்த தவம், பொறுமை; உயர்ந்த ஆற்றல், மன்னிப்பு;
உயர்ந்த மகிழ்ச்சி, கடுமையான உழைப்பு.
குருநானக்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளை ரவை உப்மா அவ்வளவா உடலுக்கு நல்லதில்லையாமே!?
போன வாரத்தில் ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருந்த சமயம் உப்மா செய்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். இந்த வெள்ளை ரவை உப்மா விசயத்தில் என் மகள் என் கட்சி :) கோதுமை ரவை உப்மா அம்மிணிக்கு புடிக்கவே புடிக்காது :)))
எதுவுமே சாப்பிடற மெத்ட் ஒண்ணு இருக்கில்லையா? சாப்பிடற மெத்ட்னா, நேரா வாயில போடாம தலைய சுத்தியானு கேட்கப்படாது. அதாவது உப்மாவில் நிறைய நெய் விட்டுக்கணும்.
தொட்டுக்கொள்ள அஸ்கா சக்கரை அளந்து போடாம கொஞ்சம் தாராளமா வெச்சு அதை தொட்டு தொட்டு சாப்பிட்டா, அந்த சுவையே அலாதிதான் :))
இப்ப உப்மா எப்படி செய்வது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளைரவை...........1கப்
தண்ணீர்............................2 1/4 கப்
சின்னவெங்காயம்......15 எண்ணிக்கை
பச்சமிளகாய்.................2 (விதைகளை கண்டிப்பாக எடுத்துவிடவேண்டும்)
இஞ்சி................................சிறுதுண்டு
கறிவேப்பிலை..........2 இணுக்கு
கேரட்..............................2(சிறியதாக இருப்பின் இல்லேனா 1)
தக்காளி.........................1
கடலை எண்ணைய்...............2மேசைக்கரண்டி
கடுகு..........................1/2 தேகரண்டி
கடலைபருப்பு.........1மேசைக்கரண்டி
செய்முறை:
சின்ன வெங்காயத்தை குறுக்குவாட்டில் இரண்டாக வெட்டவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கில் 4 ஆக வெட்டவும்.
கேரட்டை பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் கடலை எண்ணைய் ஊற்றி
எண்ணய் காய்ந்தவுடன் கடுகு, கடலைபருப்பை போடவும்.
கடுகுவெடித்து கடலைபருப்பு சிவந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
வதங்கிய உடன் கேரட் போட்டு 1நிமிடம் வதக்கி தக்காளியை போடவும்.
பிறகு இஞ்சி போடவேண்டும்.
இவை எல்லாம் வதங்கிய பின்பு அளந்து வைத்த நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்த உடன் ரவையை தூவினாற் போன்று போட்டுக்கொண்டே கிளறவேண்டும்.
நன்கு சுருண்டு வரும் சமயம் 2 தேக்கரண்டி நெய்விடவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள மேற்சொன்னதையும் பின்பற்றலாம். தயிரும் நன்றாக இருக்கும்.
தேங்காய் சட்னி அல்லது சாம்பார் பொருத்தமாக இருக்கும்.
ஏதேனும் வேலை இருந்தாலோ, முடியாத சமயமோதான் இதனை செய்வது உண்டு.
சாம்பார் வைக்கும் அளவிற்கு நேரம் இருப்பின் நாம் ஏன் இதனை செய்யப்போறோம்.
ஆனா என்ன ஒரு சிலருக்கு இதெல்லாம் வைத்தால்தான் இவ்வுணவு பூரணத்துவம் அடைந்ததாக கூறுவர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உயர்ந்த தவம், பொறுமை; உயர்ந்த ஆற்றல், மன்னிப்பு;
உயர்ந்த மகிழ்ச்சி, கடுமையான உழைப்பு.
குருநானக்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்