திரும்பி வரும்போது கொடைரோடில் நிறைய பழக்கடைகள் தென்பட்டன.
கொடை ஆரஞ்சு சாலையில் கொட்டி வைத்து விற்பனை நடந்து கொண்டிருந்தது.
இன்னும் சற்று தொலைவு வந்தவுடன் கடைகள் இருந்தன. அவற்றில் மலைவாழைப் பழம் இருக்கும் என தேடி ஏமாந்து போனோ(னேன்)ம்.
மாறாகா பிளம்ஸ், பேரீக்காய்( அளவில் பெருசு), மலை இலந்தை, அவகோடா ( இந்த பேரை நெட்ல தான் கண்டுபுடுச்சேன்) அங்கு பட்டர்ஃப்ரூட் என்ற பெயரில் விற்பனையாயிற்று. இன்னும் பல பழங்கள் இருந்தன.
பட்டர் ஃப்ரூட் பார்க்க கிளிமூக்கு மாங்காய் சைஸிற்கு இருந்தது. இங்கு தேடியதில் சிறுகாய்களை வைத்தே குறிப்புகள் கண்டேன்.
வாங்கிட்டு வ்ந்து கவர்ல வெச்சது ஒருவாரமா மறந்துட்டேன். கல்லு போல காயாக இருந்தது. பார்த்தா பச்சை நிறம் மாறாமலே பழமாகி இருந்தது.
எடுத்து இரண்டாக பிளந்தால் தேங்காய் குரும்பை போல இரு பக்கமும் தொட்டி போல காட்சியளித்தது.
நடுவில இருந்த கொட்டை, எனக்கு உருண்டை வெல்லத்தை ஞாபகப்படுத்தியது.
என்ன செய்வது என்று தெரியாமலே இரண்டாக பிளந்து வைத்தாயிற்று. லேசாக ஸ்பூன் விட்டு இளநீர் போல் சுரண்டி எடுத்து சாப்பிடக்கொடுத்தேன் மகளிடம்.
முகபிரதிபலிப்பு அவ்வளவாக நன்றாக இல்லை. அடம் பிடித்து வாங்கியதென்னவோ மகள்தான். அதனால் சுவை பிடிக்கவில்லை என்று கட் அன்ட் ரைட்டாக கூறாமல், நல்லா இருக்கு, இல்லை என்பது போன்ற தலையசைப்பை வெளிப்படுத்தினாங்க.
பிறகு நானும் எடுத்து சுவைத்து பார்த்தேன், இன்ன சுவை என்று அறுதியிட்டு கூறவியலா நிலை.
சரி மிக்ஸியில் போட்டு அடித்து ஜூஸாக மாற்றலாம் என நினைத்து ஆப்பிள் ஜூஸ் போல 1/2 டம்ளர் காய்ச்சிய பாலை ஊற்றி, 2 ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்றாக அடித்தேன். அப்பவும் வெண்ணைய் போலவே காட்சியளித்தது. அதனால்தான் வெண்ணய் பழம்னு பேர் வந்திருக்கு!!.
சரி இதுக்கு ஜூஸ்னு பேர் பொருத்தமா இருக்காதுனு சொல்லி "ஸ்மூதி"னு பேர் வெச்சு , அதை டம்ளரில் ஊற்றி(போட்டு) ஸ்பூன் போட்டு சாப்பிட கொடுத்தேன். ம்ஹூம் ஒண்ணும் வேலைக்காவல.
அப்படியொன்னும் நல்லா இல்ல என்ற கருத்துரையை ஒருவழியா கூறி, தனக்கு இனி இது வேண்டாம் என்பதை பூடகமாக சொல்லிவிட்டார்.
பிறகு நிறைய பக்கம் தேடியதில், சப்பாத்திமாவுடன் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாகவும், சிப்ஸ், பஃப்ஸ் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளவும் பயன்படுத்தலாம் என படித்தேன். ஸாண்ட்விச்சாகவும் இன்னபிற உணவு பண்டமாகவும் பயன்படுத்தலாம் என்பதையும் அறிந்து கொண்டேன்.
அதில் இருக்கும் அளவிலா சத்துக்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இம்புட்டு சத்து உள்ள பழமா? அப்ப இனி ருசிக்காக இல்லேனாலும் சத்திற்காக அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
முழு படத்தையும் புகைப்படம் எடுக்கும் முன்பாக ஒரு ஆர்வக்கோளாறில இரண்டா வெட்டியாச்சு, அதுனால முழு பழத்தையும் பார்க்கும் யோகம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பது கொஞ்சம் மனவருத்தமாகத்தான் இருக்கிறது :)))

கொப்பரத்து வெல்லம் போல(மண்டை அல்லது உருண்டை வெல்லம்) காட்சியளிக்கிறது.
கழுவிய பின்பு பார்த்தால் கொழுமாங்கல் போல காட்சியளிக்கிறது.
மேட்டாப்பில சுரண்டி எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டிருக்கேன். பார்க்க ஐஸ்க்ரீம் போலவே இருக்கு :P
பாலும் சர்க்கரையும் சேர்த்து போட்டுள்ளேன்.
அரைத்த விழுதினை டம்ளரில் ஊத்தியாச்சு சாரி போட்டாச்சு :))
மலை போன்ற சகிப்புத் தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற தன்னம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றியைத் தரும் ரகசியம்.
சுவாமி விவேகானந்தர்.
இந்த பழத்தை ஸ்கூப் செய்து எடுத்து கொஞ்சம் சீனி சேர்த்து ஸ்பூனால் மசித்து வெள்ளரிபழம் மாதிரி அப்படியே சாப்பிடலாம்.
பதிலளிநீக்குபழம் பழுத்தால் வெளிப்புற தோல் சிறிது கருப்பு கலர் மாதிரி மாறி இருக்கும். அதை வைத்து கண்டுபிடிக்கலாம்.
அடுத்த முறை வாங்கும் போது நீங்கள் சொன்னதை முயற்சிப்பேன். தங்களின் அன்பான கருத்திற்கும், தகவலுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பெயரில்லா. பெயர் சொன்னா இன்னும் மகிழ்வேன் :)
பதிலளிநீக்கு