பொதுவா இது எல்லா இடத்திலும் நடக்கிறதுதான். என்னனு கேட்கிறீங்களா?
நோய்வாய்ப்பட்டவங்களை சென்று பார்த்து ஆறுதல் அளிப்பது. ஊர்ல எல்லாம் பாத்தீங்கனா, யாருக்காச்சும் உடம்பு சரி இல்லேனா எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சிட்டு சீக்காளிய போய் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவாங்க.
இப்படிப்போய் பார்க்கும் போது நோய்வாய்ப்பட்டவருக்கு நிச்சயம் மனதுக்கு ஆறுதலா இருக்கும்.
சில நேரங்களில் அப்படி பார்க்க வருபவர்கள் எங்கெலாம் இது போல நோய்வாய்ப்பட்டாங்க, அதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பட்ட துன்பங்கள் இதையெல்லாம் விளக்கமாக பேசுவார்கள். நோயின் தீவிரம் அதுக்கு அப்புறம் அதனால் ஏற்பட்ட பக்க, பின் விளைவுகள் எல்லாவற்றையும் மிக அற்புதமாக விளக்கி சொல்வார்கள்.
நான் என்ன சொல்றேனா, தயவு செய்து எதிர்மறையான செய்திகளை விதைத்துவிட்டு செல்லாமல் எப்பாடு பட்டேனும் பிழைத்து விட்டார்கள் என்பது போன்ற நேர்மறையான செய்திகளை விதைத்தால் கொஞ்சமேனும் நோயாளிக்கு ஆறுதலாக இருக்குமே!! கூட இருப்பவர்களை மனம் குலையச்செய்யாமல் இருக்குமே என்பதுதான்.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து பேசவேண்டிய இடம் அது என்பதை மறக்கவே கூடாது.
நோயாளியை விட உடனிருப்பவர்கள் மிகவும் அதைரியமான மனோபாவம் படைத்தவர்களாக இருப்பார்களேயானால் அதனால் ஏற்படும் இழப்பு ஈடு செய்யமுடியாத அளவுக்கு இருக்கும். கொஞ்சம் யோசித்தோமேயானால் நல்லது.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.
வார்த்தைகளுக்கு நிச்சயம் வலிமை அதிகம். ஒரு குட்டிக்கதை விவேகானந்தர் சொல்லிய கதை.
ஒரு சிறுவன் மலைமேல் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். ஒரு பாம்பு தீண்டி விட்டது. ஆனால் அவனுக்கு தெரியவில்லை.
மாறாக குச்சி கீறிவிட்டது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிட்டான்.
மாலை நெருங்கியவுடன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு இருப்பிடம் திரும்பிக்கொண்டிருந்தான்.
வழியில் எதிர்ப்பட்ட ஒருவர் " என்னப்பா இது கால்ல காயம் இரத்தம் வேற வந்திருக்கே, நீ பார்க்கலியா" என வினவுகிறார்.
அதற்கு அச்சிறுவன் "ஐயா காலில் குச்சி கிழித்துவிட்டது அதனால் உண்டான காயம்" எனக்கூறுகிறான்.
காயத்தை உற்றுப்பார்த்தவர் " தம்பி இது குச்சி கிழிக்கலப்பா, பாம்பு தீண்டிய காயம்" எனக்கூறுகிறார்.
அவர் சொன்ன அடுத்த வினாடி அச்சிறுவன் மயங்கி விழுந்து மரணத்தை எய்துகிறான்.
காலையிலிருந்து குச்சி கீறிவிட்டது என்ற மனநிலையில் இருந்த சிறுவனை, தீண்டியது பாம்பு என்ற அதிர்ச்சி மரணத்தை நோக்கி இழுத்து சென்றுவிட்டது.
நாம் சொற்களின் வலிமை தெரியாமல் சில நேரங்களில் பேசிவிடுகிறோம். அவ்வாறில்லாமல் கொஞ்சமேனும் சிந்தித்து பேசுவோமேயானால் அதனால் உண்டாகும் பலன் பலமடங்காகும்.
நோய்வாய்ப்பட்டவங்களை சென்று பார்த்து ஆறுதல் அளிப்பது. ஊர்ல எல்லாம் பாத்தீங்கனா, யாருக்காச்சும் உடம்பு சரி இல்லேனா எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சிட்டு சீக்காளிய போய் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவாங்க.
இப்படிப்போய் பார்க்கும் போது நோய்வாய்ப்பட்டவருக்கு நிச்சயம் மனதுக்கு ஆறுதலா இருக்கும்.
சில நேரங்களில் அப்படி பார்க்க வருபவர்கள் எங்கெலாம் இது போல நோய்வாய்ப்பட்டாங்க, அதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பட்ட துன்பங்கள் இதையெல்லாம் விளக்கமாக பேசுவார்கள். நோயின் தீவிரம் அதுக்கு அப்புறம் அதனால் ஏற்பட்ட பக்க, பின் விளைவுகள் எல்லாவற்றையும் மிக அற்புதமாக விளக்கி சொல்வார்கள்.
நான் என்ன சொல்றேனா, தயவு செய்து எதிர்மறையான செய்திகளை விதைத்துவிட்டு செல்லாமல் எப்பாடு பட்டேனும் பிழைத்து விட்டார்கள் என்பது போன்ற நேர்மறையான செய்திகளை விதைத்தால் கொஞ்சமேனும் நோயாளிக்கு ஆறுதலாக இருக்குமே!! கூட இருப்பவர்களை மனம் குலையச்செய்யாமல் இருக்குமே என்பதுதான்.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து பேசவேண்டிய இடம் அது என்பதை மறக்கவே கூடாது.
நோயாளியை விட உடனிருப்பவர்கள் மிகவும் அதைரியமான மனோபாவம் படைத்தவர்களாக இருப்பார்களேயானால் அதனால் ஏற்படும் இழப்பு ஈடு செய்யமுடியாத அளவுக்கு இருக்கும். கொஞ்சம் யோசித்தோமேயானால் நல்லது.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.
வார்த்தைகளுக்கு நிச்சயம் வலிமை அதிகம். ஒரு குட்டிக்கதை விவேகானந்தர் சொல்லிய கதை.
ஒரு சிறுவன் மலைமேல் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். ஒரு பாம்பு தீண்டி விட்டது. ஆனால் அவனுக்கு தெரியவில்லை.
மாறாக குச்சி கீறிவிட்டது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிட்டான்.
மாலை நெருங்கியவுடன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு இருப்பிடம் திரும்பிக்கொண்டிருந்தான்.
வழியில் எதிர்ப்பட்ட ஒருவர் " என்னப்பா இது கால்ல காயம் இரத்தம் வேற வந்திருக்கே, நீ பார்க்கலியா" என வினவுகிறார்.
அதற்கு அச்சிறுவன் "ஐயா காலில் குச்சி கிழித்துவிட்டது அதனால் உண்டான காயம்" எனக்கூறுகிறான்.
காயத்தை உற்றுப்பார்த்தவர் " தம்பி இது குச்சி கிழிக்கலப்பா, பாம்பு தீண்டிய காயம்" எனக்கூறுகிறார்.
அவர் சொன்ன அடுத்த வினாடி அச்சிறுவன் மயங்கி விழுந்து மரணத்தை எய்துகிறான்.
காலையிலிருந்து குச்சி கீறிவிட்டது என்ற மனநிலையில் இருந்த சிறுவனை, தீண்டியது பாம்பு என்ற அதிர்ச்சி மரணத்தை நோக்கி இழுத்து சென்றுவிட்டது.
நாம் சொற்களின் வலிமை தெரியாமல் சில நேரங்களில் பேசிவிடுகிறோம். அவ்வாறில்லாமல் கொஞ்சமேனும் சிந்தித்து பேசுவோமேயானால் அதனால் உண்டாகும் பலன் பலமடங்காகும்.
மனதில் தோன்றியது ரொம்ப நல்ல கருத்து, மீதி பதிவுகள் இன்னும் படிக்கல படிச்சதும் சொல்றேன்.......
பதிலளிநீக்கு///கருத்து நெல்மணிகள்/// இன்னும் அழகு....