செவ்வாய், 13 ஜனவரி, 2015

கடவுள்

ஒரு குட்டி கதை, ஆனால் உள்ளிருக்கும் விசயமோ மிக ஆழமானது. சமீபத்தில் வாட்ஸப்பில் காணக்கிடைத்தது.
பெரும்பாலானோர் அறிந்திருக்கும் கதையாகத்தான் இருக்கும்.

கடவுள் கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார்.

"நீ கழுதையாகப் பிறந்து நாள் முழுதும் பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்".

கழுதை சொன்னது " இறைவா கழுதையாக எனக்கு 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்."

அதற்கு கடவுளும் சரியெனச் சொல்லி விட்டார்.

கடவுள் நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். " நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருந்து அவன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்".

நாய் கடவுளிடம் "இறைவா எனக்கு 30 ஆண்டுகள் வேண்டாம் 15 ஆண்டுகளே போதும்" என்று கூறியது.

கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.

கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் " நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய், 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்".

குரங்கு "எனக்கு 10 வருடங்களே போதும் சாமி அதற்கு மேல் வேண்டாம்" எனக்கூறியது.
கடவுளும் அப்படியே ஆகட்டும் எனக்கூறினார்.

அடுத்த படியாக கடவுள் மனிதனைப் படைத்தார்.

"நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய்.
உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்".

மனிதன் " சாமி சாமி எனக்கு 20 வருசம் ரொம்பக் குறைவு, அதனால கழுதை வேண்டாம்னு சொன்ன 30 வருசம், நாய் வேண்டாம்னு சொன்ன 15 வருசம். கொரங்கு வேண்டாம்னு சொன்ன 10 எல்லாத்தையும் எனக்கே கொடுத்திடுங்க சாமி"னு கேட்டான்.

கடவுளும் அப்படியே ஆகட்டும்னு சொன்னார்.

அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 20 வருடங்கள் கழுதையைப் போல குடும்ப பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின்பு 15 ஆண்டுகள் நாயைப்போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசி பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்