தேங்காய் 1 மூடி துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய் ஒன்றினை நான்காக வெட்டி விதைகளை அகற்றி வைக்கவும்.
கறிவேப்பில்லை 2 இணுக்கு உருவிவைக்கவும்.
பூண்டு 2 பல் தோல் நீக்கி வைக்கவும்.
இஞ்சி சிறுதுண்டு தோல் நீக்கிவைக்கவும்.
இவற்றுடன் பொட்டுக்கடலை 2மேசைக்கரண்டி ,தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
வாணலியில் 1 மேசைக்கரண்டி கடலை எண்ணைய் விட்டு சூடானவுடன், கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு மொறு மொறுப்பானவுடன் அரைத்த சட்னியில் கலக்கி பரிமாறவும்.
சுவையான தேங்காய் சட்னி தயார்!!
இட்லி, தோசை, பணியாரம், வெண்பொங்கலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். பூரி செய்தாலும் தேங்காய் சட்னி எங்கள் வீட்டில் செய்வது வழக்கம். அனைவருக்கும் பிடித்தமான ஒன்று!!.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
ஒருவர் உன்னை உயர்த்திப் பேசும்போது விழிப்பாய் இரு. உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம்.
_()_()_()_()_.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்