அருகம்புல் சாறு தயாரிப்பு முறை:
ஒரு கைப்பிடியளவு அருகம்புல்லை எடுத்து நன்கு நீரினால் அலசவேண்டும். சிறு துண்டு இஞ்சியை தோல் சீவி நான்காக வெட்டிக்கொள்ள வேண்டும். இவற்றை மிக்ஸி சின்னஜாரில் 1/2 டம்ளர் நீர்விட்டு அரைத்து வடிகட்டி கொள்ளவேண்டும். தினமும் குடித்து வர உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
![]() |
இளம்புல்லாக இருப்பின் நல்லது |
நரம்புக்கோளாறு உள்ளவர்கள் நாள்தோறும் குடித்து வந்தால் நோயின் தீவிரம் மட்டுப்படும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் அருகம்புல் சாறு பெரும்பங்கு வகிக்கின்றது.
இயற்கை நல மருத்துவமனைகளில் அருகம்புல் சாறு இல்லாத நாட்களே கிடையாது.
மேலும் பலப்பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய அருகம்புல் ஜீஸினை அனைவரும் பயன்படுத்தலாமே!! மிகவும் எளிதான ஒன்று ஆனால் பலனோ ஏராளாம்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
வெற்றிபெற மூன்று வழிகள் அவை:
1) மற்றவர்களைவிட அதிகமாக தெரிந்துகொள்ளுங்கள்.
2) மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்.
3) மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
_(((())))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்