வாழைத்தண்டுடன் முள்ளங்கி கீரைத்தண்டும் பீட்ரூட் கீரைத்தண்டும் சேர்த்து முத்தண்டு பொரியலாக்கி விட்டேன்.
முள்ளங்கிகீரையின் தண்டு மற்ற இரண்டையும் விட வேக நேரம் எடுத்தது. பீட்ரூட்கீரையின்தண்டும் வாழைத்தண்டும் ஒண்ணு போல உடனே வெந்துவிட்டது.
வாழைத்தண்டின் மேல் தோலை உரித்து எடுத்துவிட வேண்டும்.
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டினை பொடியாக அரிந்து, ஒரு கரண்டி தயிர் சேர்த்த நீரில் போட்டு வைக்கவேண்டும். அப்பொழுதுதான் நிறம் மாறாமல் இருக்கும். வாழைத்தண்டில் நார் எடுப்பதற்கு பாட்டில் கழுவும் ப்ரஷ்ஷை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரஷ்ஷினை தண்டு உள்ள நீரில் வைத்து சுழற்றினால் நார் வந்துவிடும்.
முள்ளங்கி கீரைத்தண்டையும், பீட்ரூட் தண்டையும் நன்கு கழுவி பொடியாக அரிந்து வைக்கவேண்டும்.
சின்ன வெங்காயம், வறமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை கடுகு, கடலைப்பருப்பு போட்டு தாளித்தவற்றுடன் வதக்கவேண்டும்.
அரிந்த தண்டுகளைப்போட்டு வதக்கவேண்டும். 1 டம்ளர் நீர்விட்டு வேக வைக்கவேண்டும்.
வெந்தவுடன் 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல் போட்டு கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
முத்தண்டு பொரியல் தயார்!!.
நீர்சத்தும் நார்சத்தும் மிகுந்த இப்பொரியல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
Dr. A.P.J.அப்துல்கலாம்.
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்