முதல்ல இஞ்சியோட மகிமையை பார்ப்போம். இஞ்சி வெறும் ருசிக்காக மட்டுமே சேர்க்கப்படும் பொருள் கிடையாது. ஒரு துண்டு இஞ்சிய ஒரு பெரிய டம்ளர் நீரில் தட்டிப்போட்டு கூட கொஞ்சம் வறமல்லி ( தனியா) போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி குடிச்சா தலைவலி, உடல் அசதி பற்ந்து போய்டும்.
நல்லா மூக்கு முட்ட சாப்பிடுற நமக்கு எப்படி அதெல்லாம் ஜீரணமாகுதுனா, இஞ்சி சேர்த்த உணவுப்பண்டங்கள் தான் நாம் பெரும்பாலும் உண்ணுகிறோம்.
ஸோ இதிலிருந்து என்ன தெரிதுனா, இஞ்சி ஜீரணமண்டலத்த தூண்டிவிட்டு நல்லா வேலை வாங்கிடுது.
மூட்டுவலி உள்ளவங்க தினப்படி சமையலில் இஞ்சி தவறாமல் சேர்த்து வந்தால் நல்ல பலனை எய்தலாம்.
கரும்பு ஜூஸ் குடிக்கும் போது அதில ஒரு துண்டு இஞ்சி சேர்த்து பிழிஞ்சு கொடுப்பாங்க. அது அவ்வளவு ருசியா இருக்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சியை முடிந்தவரை தவிர்க்காமல் இருக்கலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைப்பதில் இஞ்சி பெரும் பங்காற்றுகிறது.
அதற்காக அதிகப்படியாக சேர்த்துக்கொள்வது ஆகாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமேயானாலும் நஞ்சுதான் என்பது நமக்கெல்லாம் தெரியாதா என்ன? இருந்தாலும் ஒரு பேச்சுக்கு சொல்லிவைத்தேன்!!
சரி இஞ்சி சட்னி எப்படி தயாரிப்பதுனு தெரிஞ்சுக்கலாம் ஏறுங்க வண்டில...
எறங்குங்க எல்லாரும், இஞ்சி சட்னி தொழில்நுட்ப நிலையம் வந்தாச்சு!!
தேவையான பொருட்களை வரிசையா எடுத்து எத எத என்னென்ன செய்யணுமோ, அத அத அதெல்லாம் செய்து, இதோ இந்த கலனில் போட்டு எண்ணைய ஊத்தி வதக்கிக்கோணும்..
எதை எதைனு சொல்றேன் கேளுங்க,
பெரியவெங்காயம் 2 எடுத்து தோலுரித்து சதரமா வெட்டிக்கணும்.
தக்காளி 1 எடுத்து அதைய நீள வாக்கில வெட்டிக்கணும்.
100 கிராம் இஞ்சியை துண்டாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு 4 பற்கள் தோலுரித்து வைக்கவும்.
கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு.
சீரகம் அரை தேக்கரண்டி.
மல்லிவிதை 1 தேக்கரண்டி.
வறமிளகாய் 2.
கடலைப்பருப்பு, வெள்ளுழுந்து பருப்பு தலா 2 மேசைக்கரண்டி.
புளி சிறிய நெல்லிக்காய் அளவும்.
தேங்காய் 1 மூடி (நடுத்தர அளவு).
தேங்காயை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் வரிசைக்கிரமமாக எண்ணையில் போட்டு வதக்கவும்.
முதலில் கடலை, வெள்ளுழுந்து பருப்பு, பின்னர் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, வறமிளகாய், சீரகம், மல்லிவிதை. சூடு ஆறுவதற்கு முன்பாக புளியை இவற்றினுள் ஒளித்து வைக்கவேண்டும்.
தேங்காய், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்தால் இஞ்சி சட்னி தயார்!!.
சுவையும், மணமும், குணமும் நிறைந்த இஞ்சி சட்னியை சாதம், இட்லி, தோசை, பணியாரம் அனைத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
சிந்திப்பதும் அதனை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் சிறிது காலத்தில் சிந்திப்பதே மறந்துவிடும்.
_()_()_()_()_
நாலு வித சட்னியும் ரொம்ப அருமை. செய்து பார்த்துட்டு சொல்லுவேன்.
பதிலளிநீக்குநன்றி தோழி
நாலு வித சட்னியும் ரொம்ப அருமை. செய்து பார்த்துட்டு சொல்லுவேன்.
பதிலளிநீக்குநன்றி தோழி
பாராட்டிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றிங்க :)
பதிலளிநீக்கு