மினி இட்லிப்பூ மூணு கலர் வாங்கினோம். செடி நடும்போதே வெள்ளை அவ்வளவு சீக்கிரம் தளஞ்சு பூ வராதுனு சொன்னாங்க. அதே போலத்தான் பூக்குமா? பூக்குமானு? பாத்த கண்ணும் பூத்து போய்டும் போல காக்க வெச்சு, ஒருநாள் அழகா மொட்டு வந்து பூ வந்துச்சு.
அதுக்கப்புறம் பூப்பேன், ஆனா பூக்க மாட்டேன் என்பது போலவே இருக்கு.
ஆனா பாருங்க ரோஜா நிற இட்லிப்பூ வெச்சதிலிருந்து அழகா பூத்திட்டே இருக்கு.
ஆனா என்ன மயில் நடமாடும் இடம் என்பதால், மயில் தன்னோட நீண்ண்ண்ட தோகையால அவ்வப்பொழுது வருடிச் செல்வதால் பூக்கள் சேதாரமாகிப் போய்டுது. செடிக்கும் சேதாரம் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
கேமரா புடிக்காத அளவுக்கு தன்னோட நீண்ட தோகைய வீசிக்கிட்டே அடிக்கடி வந்து மிளகுதக்காளி செடிய கடிச்சுக்கிட்டே தண்ணி குடுச்சிட்டு போறாய்ங்க...
![]() |
வெள்ளையம்மா |
![]() |
இந்தப்பூக்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கின்றன. கேட்டுக்கு வெளிய வெச்சிருக்கோம். இந்த மரம் வெச்சு ஏழெட்டு வருசமிருக்கும். ஆக்சுவலா பாத்தீங்கனா, நாங்க கேட்டது வேறொரு பூ மரக்கன்று.
மாத்தி கொடுத்துட்டாங்க. ஆனாலும் இந்த மலர் அதற்கு சற்றும் குறையாமல் அழகுடன் இருக்கு.
ஏப்ரம் கடைசிலருந்து மே வரைக்கும் பூக்குது. சில சமயம் ஜூன் வரைக்குமே பூக்கள் இருக்கும். மரம் பூரா வண்ணமயமா கொத்து கொத்தா பூக்கள் நிரம்பி இருக்கும்.
இதில ஆரஞ் இட்லி எங்கேனு கேட்கிறீங்களா? அது வெச்சு ஓரிரு பூக்கள் மட்டுமே பூத்தது. பிறகு நிழல்னால செடி வளராமலே போய்டுச்சு. இன்னொரு முறை வாங்கி வெயில் படுமிடத்தில் வெக்கலாம்னு இருக்கோம்.
வெச்சு பூ வந்தவுடனே படம் சேர்க்கிறேன்.:)
இட்லிப்பூ :)
~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
சேர்ப்பது மிக கடினம், செலவு செய்வது மிக எளிது; பணம் மட்டுமல்ல அடுத்தவர் உள்ளத்தில் நாம் சேர்த்து வைக்கும் நல்லெண்ணம் கூட.
_(((())))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்