பச்சைப்பயறு தோசை, மிகவும் எளிதாகவும், விரைவாகவும் செய்துவிடக்கூடிய ஒன்றாகும்.
தோசைமாவு போல புளிக்க வைக்கவேண்டியதில்லை. உடனடியாக தோசை வார்க்கலாம்.
இட்லி மாவு இல்லேனு மனமொடிய தேவையில்லை.
தேவையான பொருட்கள்:
அரிசி .....4 கப்
பச்சைப்பயறு....1 கப்
வெந்தயம்.....1 தேக்கரண்டி
அரிசியையும், பச்சைப்பயறு, வெந்தயம் மூன்றினையும் நன்கு கழுவி மூழ்கும் வரை நீர் விட்டு ஊறவைக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேரங்களாவது ஊறவைக்க வேண்டும்.
கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். கூடவே தேவையான அளவு கல் உப்பு போடவும்.
அரைத்த மாவினை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். தேவையான அளவு நீர் விட்டு கரைக்கவும். சாதாரணமாக தோசை மாவு பதத்தில் இருந்தாலே போதுமானது.
தோசைக்கல்லை காயவைத்து, மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
வெங்காய சட்னியுடன் பச்சைப்பயறு தோசை சாப்பிட்டு மகிழ்ந்தோம். சுவையும் சத்தும் நிரம்பிய பச்சைப்பயறு தோசை நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். தைரியமாக முயற்சிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
அழும் போது தனிமையில் அழு,
சிரிக்கும் போது நண்பர்களுடன் சிரி,
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்..
கவிஞர். கண்ணதாசன்
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்