புதன், 5 ஆகஸ்ட், 2015

பொரியல் பொடி/கறிப்பொடி


பொரியல் பொடி, அனைத்து பொரியலுக்கும் நான் இதனைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட கிழங்கு மற்றும் காய் வகைகளுக்கு  பயன்படுத்துவதுண்டு.
குறிப்பாக சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, வாழைக்காய், புடலங்காய், கேரட்பீன்ஸ் பொரியல்களுக்கு போடுவதுண்டு. மிகவும் ருசியாக இருக்கும்.
வரப்போகும் நாட்களில் மற்ற காய்கறிகளுக்கும் அரை தேக்கரண்டி அளவு போடலாம் என நினைத்திருக்கிறேன் :).

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு.........2 மேசைக்கரண்டி

உளுந்தம்பருப்பு....1 மேசைக்கரண்டி

வறமிளகாய்.....10 (காரத்திற்கேற்ப)

சீரகம்....1/2 தேக்கரண்டி

வறமல்லி/தனியா...1/4 தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் முதலில் கடலைப்பருப்பை போட்டு பின்னர் உளுந்தம்பருப்பு போட்டு நன்கு துலாவி விடவும்.
அதனுடன் வறமிளகாய் போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும். தீயவிடக்கூடாது.

அதன் பிறகு சீரகம், மல்லி போட்டு ஒரு ஓட்டு ஓட்டி அடுப்பை நிறுத்தவும்.

ஆறியவுடன் மிக்ஸியில் நைசாக அரைத்து ஆறவைத்து(மிக்ஸியில் போட்டதால் பொடியில் சூடு இருக்கும்) பாட்டிலில் போட்டு வைக்கவும்.



இட்லி சாம்பார் செய்யும் பொழுது இதனை ஒரு தேக்கரண்டி போட்டால் நன்கு வாசனை மற்றும் ருசி இருக்கும்.

                                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் நாக்கைப் பொறுத்ததே. மனதால் நல்லதைச் சிந்தியுங்கள், நாவால் நல்லதைப் பேசுங்கள்.

--கிருபானந்த வாரியார் சுவாமிகள்

                                                           _(((())))_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்