பாகற்காய் பொரியல் இந்த முறையில் செய்தால் கசப்பு குறைவாகவும், மிகுந்த ருசியாகவும் இருக்கும். செய்முறையும் மிகவும் எளிது.
பாகற்காயை வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கவும். முடிந்த வரை மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிந்த துண்டுகளை தயிர்விட்டு நீர்க்க கரைத்த உப்பு நீரில் போட்டு வைக்கவும்.
சின்ன வெங்காயம் 10 எடுத்து தோல் நீக்கி, குறுக்குவாட்டில் துண்டுகளாக நறுக்கவும். வறமிளகாய் ஒன்று பொடியாக கிள்ளி சேர்க்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி, சீரகம் போட்டு பொரியவிட்டு, அரிந்து வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். கலர் மாறியவுடன், நீரில் இருக்கும் பாகற்காயை ஒட்ட நீரினை வடித்து சேர்க்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்தூள் சேர்க்கவும். உப்பு நீரில் போட்டதால் உப்பு கவனமாக போடவும்.
மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
காய் நன்கு வெந்து சுருள வரும் தறுவாயில், வறுத்த வேர்க்கடலையை பொடித்து சேர்க்கவும். கூட பொடித்து வைத்திருக்கும் மிளகினையும் தூவி நன்கு கிளறி இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
சுவையான வேர்க்கடலை ருசியுடன் கூடிய பாகற்காய் பொரியல் தயார். தயிர்சாதம் மற்றும் கிளறின சாத வகைகளுக்கு மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
பாகற்காய்....2
சின்னவெங்காயம்.. 10
வறமிளகாய்..1
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை...1 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி...1/2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள்...1/2 தேக்கரண்டி
மிளகு...10 (லேசாக வறுத்து பொடிக்கவும்)
சீரகம்...1/2 மேசைக்கரண்டி
எண்ணைய்...தாளிக்க
உப்பு..தேவையான அளவு
குறிப்பு:
உப்பு நீரில் போடுவதால் பாகற்காயின் கசப்பு தன்மை குறைந்து காணப்படும்.
ஒரு தக்காளி சேர்த்து குழைய வதக்கி பாகற்காயை சேர்த்தும் செய்யலாம்.
காரம் அதிகம் விரும்புவோர் மிளகாய் பொடி சேர்க்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
அதிகமாய் பேசினால், அமைதியை இழப்பாய்..
ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்..
வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாக பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாய்ப் பேசினால், வேலையை இழப்பாய்..
வெகு நேரம் பேசினால், பெயரை இழப்பாய்..
பெருமையாகப் பேசினால், ஆணடவனின் அன்பை இழப்பாய்..
---சுவாமி. விவேகானந்தர்
_(((())))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்