பழைய சோறு, பொதுவா பழைய சோறு சாப்பிடுவது என்பது கொஞ்சமல்ல நிறையவே கௌரவ ப்ரச்சனையாக நிறைய பேர் நினைப்பதுண்டு.
ஆனால் அது எவ்வளவு தவறு என்பது புரிந்தால் தினமும் காலை வெறும் வயிற்றில் நீராகாரம் என்னும் பழைய சோறு தண்ணியை தவறாமல் குடிக்க தொடங்கிவிடுவார்கள்.
வயிற்றுப்புண்ணுக்கு பெரும் நிவாரணியாக இருப்பது, இந்நீராகார நீர்தான்.
முந்தியநாள் மீதியான சாதத்தில் இரவு கொதிக்க வைத்து நன்றாக ஆறிய சுத்தமான நீரை ஊற்றி வைக்கவேண்டும்.
மறுநாள் காலையில் அந்நீரை பருகவேண்டும்.
அதிலிருக்கும் சாதத்தை நன்கு கரைத்து, தயிர் ஊற்றி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தோல் சீவி நறுக்கிய வெள்ளரி சேர்த்து உண்டால் சுவை அபிரிமிதமாக இருக்கும்.
இங்கு படத்தில் இருக்கும் பழையசாதத்தை மிக்ஸியில் போட்டு, உடன் சின்னவெங்காயம், இஞ்சி, புதினா ஆகியவற்றை போட்டு அரைத்து, மேலே வெள்ளரி தூவியுள்ளேன்.
ஒருநாள் ஞாயிறன்று இதனை காலையில் செய்தேன், சொன்னா நம்பமாட்டீங்க, ஒரு துளி இல்லாமல் சாப்பிட்டாயிற்று.
பொதுவா ஞாயிறுனாவே, ஒரு சோம்பேறிதனம் தானே வந்து ஒட்டிக்கொள்ளும்.
காலையில் நேரம் கழித்து எழுவது, அதன் பிறகு காலை உணவுக்கு, வெண்ணைய் தடவியரொட்டியோ, தோசையோ செய்து சாப்பிடுவது.
ஆனா இந்த முறை மிகவும் பயனுள்ளதா இருக்குனு சொல்லலாம்.
![]() | ||
பொடியாக ந்றுக்கிய வெள்ளரி |
![]() |
புதினா ,இஞ்சி சேர்த்து அரைத்த சாதம் |
![]() |
அதனுடன் சி.வெங்காயம், வெள்ளரி |
நீங்களும் முயற்சித்து பாருங்களேன்!! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்