தேவையான பொருட்கள்:
மொந்தன் வாழைக்காய்................2
சின்ன வெங்காயம்..........10
வறுத்து பொடிக்க:
கொத்தமல்லி விதை/ தனியா.......1 மேசைக்கரண்டி
வறமிளகாய்......................3
கடலைபருப்பு..............1மேசைக்கரண்டி
தேங்காய்..............1 மேசைக்கரண்டி
தாளிக்க:
கறிவேப்பிலை............2 இணுக்கு
எண்ணைய்......1 மேசைக்கரண்டி
கடுகு, கடலைப்பருப்பு..........சிறிதளவு
செய்முறை:
வாழைக்காயை சதுரமாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு வேகவைத்து நீரை வடித்து வைக்கவும்.
பொடிக்க கொடுத்தவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும்.
முதலில் கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பின்னர் மிளகாய், தனியா போட்டு வறுக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் மற்றும் வறுத்தவற்றைப் போட்டு நீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.
வாணலி காய்ந்தவுடன் எண்ணைய் விட்டு கடுகு, கடலைபருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வணக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பின்னர் வேகவைத்த வாழைக்காயை போட்டு உடையாமல் கிளறவும். அதன் பிறகு அரைத்தவற்றைப் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.
சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.
ஸ்ரீ அன்னை.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்