மிகவும் எளிதாக செய்யக்கூடிய கறிவகை இது.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர்.............15 துண்டுகள் (ஒரு பூவில் பாதியை போட்டிருக்கேன்)
உருளைக்கிழங்கு........1
பெரியவெங்காயம்.........1
பச்சை மிளகாய்.....1 (காரத்திற்கேற்ப)
தக்காளி..................1
சீரகம்..........1தேக்கரண்டி
மல்லிபொடி........2மேசைக்கரண்டி
மஞ்சள்தூள்........1/2 தேக்கரண்டி
கரம்மசலா பொடி..........1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை......1 இணுக்கு
உப்பு.........தேவையான அளவு
கடலை எண்ணைய்.......1மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை தனித்தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சுடுநீர் வைத்து கொதித்த உடன், அதில் உப்பு போட்டு காலிஃப்ளவரை போட்டு மூடி வைக்கவேண்டும். நீர் கொதிதவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு இது போல் செய்யவேண்டும்.
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், எண்ணைய் ஊற்றி சீரகம் போட்டு பொரியவிடவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியை போட்டு குழைய விட்டு, தூள் வகைகளை சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை போட்டு பிரட்டவும். தேவையான அளவு உப்பு போடவும்.
பின்னர் சுடுநீரில் உள்ள காலிஃப்ளவரை நீரை வடித்துவிட்டு எடுத்து போட்டு நன்கு கிளறி மூடவும்.
1 நிமிடம் கழித்து நீர் விட்டு மூடிவைக்கவும்.
இடையிடையே திறந்து கிளறவும்.
பூவும், கிழங்கும் வெந்தவுடன் மல்லித்தழை போட்டு அடுப்பை நிறுத்தவும்.
பின்குறிப்பு:
காலிஃப்ளவரை அறிக்கி அல்லது மீன்கரண்டியால் (துளைகளுடன் இருக்கும்) எடுத்து போடவும். அப்பொழுதுதான் அதிலிருக்கும் புழுக்கள் அடியில் நிற்கும். சுடு நீரில் போடும் முன்பாகவே ஒரு முறை பச்சத்தண்ணீரில் கழுவிவிட்டு போடுவது நல்லது.
காரம் அதிக விரும்புவர்கள் தனி மிளகாய்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றி என்பது சக்தியின் அடிப்படையில் ஏற்படக்கூடியது; அந்த சக்தி திட்டமிட்ட செயல்முறையின் மூலம் உருவாகிறது.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்