![]() |
முட்டை ப்ரெட் உப்மா |
இந்த உப்மா செய்ய மிகக்குறைந்த நேரமே போதுமானது. அவசரமாக காலைவேளையில் வெளியில் செல்வோருக்கான மிகவும் எளியவகை உணவு இது.
தேவையான பொருட்கள்:
முட்டை...........4
ப்ரெட்...................6 துண்டுகள்
தக்காளி..........1 சிறியது
பெரியவெங்காயம்.......1
பச்சை மிளகாய்.....2 (காரத்திற்கேற்ப)
புதினா..........1கைப்பிடி (விருப்பபட்டால்)
மஞ்சள்தூள்........சிறிது
உப்பு.......1/4 தேக்கரண்டி
தாளிக்க:
சோம்பு/ பெருஞ்சீரகம்..........1தேக்கரண்டி
கடலை எண்ணய்........1மேசைக்கரண்டி
(நான் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்தேன், சோம்பு போட்டால் வேறு விதமான ருசி கொடுக்கும்)
செய்முறை:
முதலில் ப்ரெட் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக அரியவும்.
பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து, விதைகளை அப்புறப்படுத்தவும். (ப.மிளகாய் விதைகள் மூல நோய் வருவதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது).
தக்காளியையும் பொடியாக அரியவும்.
அடுப்பில் வாணலியை ஏற்றி, காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சோம்பு போட்டு பொரியவிடவும்.
பின்னர் பெரிய வெங்காயம், மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமானவுடன் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
மஞ்சள்தூள் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
அதன் பிறகு புதினா போடவும். புதினா வதங்கியவுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதன் பிறகு ப்ரெட்டை போடவும்.
கைவிடாமல் கிளற வேண்டும். முட்டை தக்காளி, வெங்காய கலவையுடன் நன்கு சுருண்டு வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.
(பச்சை மிளகாய் இல்லாத காரணத்தினால் வறமிளகாய் போட்டுள்ளேன்).
விரைவில் செய்யக்கூடிய இந்த குறிப்பினை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம். விரும்பி உண்பர்.
மசாலா சுவையுடன் விரும்புவர்கள் இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி செய்யலாம். சுவை வேறு விதமாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சூழ்நிலைகளை அனுசரிக்க பழக்கிக்கொண்டால், இந்த உலகம் உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும்.
சார்லஸ் டிக்கன்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்