திங்கள், 2 பிப்ரவரி, 2015

எம்கூடு தேடி வந்த பறவை

யாரோ னிக்கிறாப்பியே இருக்கே...!






சரி நாம வந்த வேலைய பாப்போம்...!!

ஹை....கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?:))) .உள்ளே போறதுக்கு வழி இருக்கு...!!!

ம்ஹூம்..இல்லையே..:(  இந்த வீடு கட்டின இஞ்சினீரு சரி இல்ல....

மேலே எதாச்சும் வேற வழி இருக்கானு பார்ப்போம்...

சரி இல்லேனா என்ன, நம்ம கனத்த மூக்கு எதுக்கு இருக்கு..லொட் லொட்..


அட போங்கடா உங்க கூடும் நீங்களும்னு பறந்து போய்டுச்சு :(

இங்க தேன் சிட்டு நிறைய பறக்கும், அதுக்கு ஆகும்னு நினைச்சு, இந்த கூடுகள் அக்ரி இன்டெக்ஸ்ல வாங்கினது.

தேங்கா தொட்டி வெச்சு செய்து இருக்காங்க. நல்லா பெரிய தேங்காயை ஒரு ஓரத்தில ஓட்டை  போட்டிருப்பது போலவே இருக்கும்.

ஒரு கூடு 100 ரூபாய்னு 200 ரூவாக்கு 2 கூடு வாங்கியாந்து, முதல்ல மகிழம்பூ மரத்தில மாட்டினோம்.

ஆனா பாருங்க மழை பேஞ்சா மழைத்தண்ணிக்கு வடிகால் வசதியில்லாத கூடு இது. அதுனால கார்போர்ச் ல மாட்டிவெச்சிட்டோம்.

இது வரை ஒரு ஈ, குருவி கூட எட்டிப்பாக்கல. நேத்து மதியம் திடீர்னு இவுங்க வந்தாங்க, ரொம்ப உரிமையோட சுத்தி சுத்தி பாத்துட்டு, இது சரிபட்டு வராதுனு கிளம்பிட்டாங்க :(

ஆமா வந்தவரு பேரு ஊர்லாம் என்னானே தெரில....

ஆனா அலகு நல்லா கனத்து இருந்தது. நல்லா தைரியசாலினு மட்டும் தெரிஞ்சுது.
இந்த போட்டோலாம் உள்ள இருந்து, கண்ணாடி ஜன்னல் வழியா எடுத்தது.

நீங்களும் பார்த்து ரசிங்க.

இந்த கனத்த மூக்கு பறவைக்கு என்னா பேருனு தெரிஞ்சா விரைவில் இங்கு சொல்றேன்.

அதுக்கு முன்னாடி ஒரு காக்கா பாட்டு. சின்ன புள்ளைல படிச்சது..

"கனத்த மூக்கு காக்கா
கழுத்த நீட்டு சோக்கா
இனத்தைக் கொஞ்சம் கூப்பிடு
இந்தா சோறு சாப்பிடு
மணி அடிக்கும் வந்திடு
மாங்கா எனக்கு தந்திடு"

ஹீ ஹீ குருவிக்கு காக்கா பாட்டு :))) 

                                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உழைப்பால் ஒருவன் உயர்வைப் பெறலாமே அன்றி, 
யோகத்தால் உயர்வை ஒருநாளும் பெறமுடியாது.

எடிசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்