வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கைகுத்தல் அரிசி பணியாரம்



ப்ரவுன் ரைஸ்தான் நாங்கலாம் கைகுத்தல் அரிசினு சொல்வோம்.  மிஷின்ல கொடுத்து அரைச்சதுதான். ஆனா ரொம்பவும் பாலீஷ் போடாம, மேட்டாப்பில நெல்லோட தோலை மட்டும் எடுக்கிற அளவுக்கு அரைக்கிறது. அதுனால இதுல நார்ச்சத்து மிகுந்து காணப்படும். கிரைண்டர்ல ஊறவெச்சு அரைக்கும் போதே சீக்கிரம் அரைபடுறதில்ல. என்ன சொல்றது கோதுமை அரைக்கிறாப்பில கொஞ்சம் கடிசாதான் இருக்கு.
இதுல சாப்பாடு செய்தாலும் சுவை ரொம்ப நல்லா இருக்கு.


தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி..........4 கப்

குண்டு உளுந்து...........................1கப்

வெந்தயம்..........1 மேசைக்கரண்டி

கேரட்.................1கப் துருவியது

சீரகம்..........1தேக்கரண்டி

உப்பு............தேவையான அளவு

கடலை எண்ணைய்........தேவையா அளவு

செய்முறை:

கைகுத்தல் அரிசியை நன்கு கழுவி 5 மணிநேரம் ஊறவைக்கவும்.

உளுந்தம் பருப்பையும், வெந்தயத்தையும் கழிந்து ஃப்ரிட்ஜில் 5 மணிநேரம் வைக்கவும்.

அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக அரைக்கவும்.

8 மணிநேரம் புளிக்கவிடவும்.

பின்பு கேரட்டை நன்கு துருவி மாவில் போடவும்.

சீரகத்தை கைகளால் நன்கு தேய்த்து  மாவில் போடவும்.

மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் பணியாரக்கல் வைத்து சூடானவுடன் எண்ணைய் தடவி, இக்கலவையை சிறு கரண்டியால் ஊற்றவும்.

பணியாரக்கல்லை மூடி வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து திருப்பி விட்டு, மீண்டும் வேக விடவும்.

பணியாரம் வெந்து விட்டதா என்று கறிவேப்பிலை குச்சியினால் குத்தி பார்த்து எடுக்கவும்.

சுவையும், மணமும், சத்தும் நிறைந்த பணியாரம் தயார்.

சட்னி அல்லது விருப்பப்பட்ட குழம்பு வகையுடன் பரிமாறவும்.














காலிஃப்ளவர் குழம்புடன் பணியாரம் செய்துள்ளேன். தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, நிலக்கடலை சட்னி ஆகியவை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்