வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பொட்டுக்கடலை பொடி


பொட்டுக்கடலை பொடி மிக மிக எளிமையாக செய்து விடலாம். இப்பொடியை சூடான சாதத்தில் நெய்விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

மிக்ஸி சின்ன ஜாரில் அரைவாசிக்கு கொஞ்சம் அதிகமாக பொட்டுக்கடலை போட்டு, அதனுடன் காய்ந்த வறமிளகாய் 3 (காரத்திற்கேற்ப), 4 பல் பூண்டு, கல்உப்பு 1/2 தேக்கரண்டி (தேவையான அளவு) போட்டு  தண்ணீர் விடாமல் நைஸாக பொடித்து எடுத்தால், சுவையான பொட்டுக்கடலை பொடி நொடியில் ரெடி!!
அதிகமாக செய்து காற்றுப்புகாத பாட்டிலிலோ, டப்பாவிலோ போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்டநாட்கள் பயன்படுத்தலாம்.

என்னவர் பொட்டுக்கடலை விரும்பி, மாலை அலுவலகம் முடிந்து வந்து கிச்சனுள் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிடுவது வாடிக்கை.
(நாங்கூட ஏதோ எங்கிட்ட பேசவராறாக்கும்னு நெனச்சு ஏமாந்து போனதுண்டு!!)

என் மகளுக்கு ரொம்பவும் பிடித்த பொடி, என் மகன் அவ்வளவாக இதனை இரசித்து ருசிப்பதில்லை.

இந்த பொடி அரைத்தால் விரைவில் மாயமாகிவிடும். அதனால் இந்த பாட்டில், கீட்டில், டப்பா,கிப்பாவிலெல்லாம் போட்டு ஸ்டாக் வைப்பதில்லை.
தேவையான பொழுது அரைத்துவிடுவேன்.

நெய் விரும்பாதவர்கள் நல்லெண்ணய் சேர்த்து உண்டு மகிழலாம்.

                                                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

சுவாமி. விவேகானந்தர்.
                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்