திங்கள், 16 பிப்ரவரி, 2015

வெண்ணைய் எடுத்தல்




தயிர் சிலுப்பி வெண்ணைய் எடுப்பதை சிறு வயதிலிருந்தே அறிந்திருக்கிறேன்.

எல்லா வீட்டு சமையலறைகளிலும் தயிர் சிலுப்புவதற்கென்றே ஒரு இடம் அமைக்கப்பட்டிருக்கும். சுவரில் சிறு வளைவுகளுடன் கூடிய இரண்டு கம்பிகளை வைத்தே கட்டியிருப்பர். அதற்கு ஒண்டி என்று பெயர். அளவில் சிறியதாக இருக்கும். ஒண்டிகள் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த ஒண்டிகளில் பனை மட்டையை உரித்தால் கயிறு போல கிடைக்கும். அதற்கு பெயர் அவுனி(ணி). அதனை ஓவல் வடிவத்தில் கட்டி, அவற்றிற்கு இடையில் மத்தினை வைத்து, அவற்றிலிருக்கும் கயிறால் சிலுப்புவர். தினமும் காலை வேளையில் இந்த வேலை கட்டாயம் நடக்கும்.

அதுவும் நேரம் கழிய ஆரம்பித்தால் வெண்ணய் திரண்டு வராமல் உருகி போய்விடும். இப்போதைய  போன்று அப்பொழுதெல்லாம் ஃப்ரிட்ஜ் கிடையாது.

எருமைப்பால் என்றால் வெண்ணைய் நன்கு வெள்ளை நிறத்துடன் இருக்கும். மாட்டுப்பால் என்றால் பேர்ல் எல்லோ கலரில் இருக்கும்.



தினமும் தயிரில் இருக்கும் ஆடைகளை சேகரம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு வாரத்திற்கான ஆடைகளை மிக்ஸியில் போட்டு, குளிர்ந்த நீர் விட்டு நன்கு அடிக்க வேண்டும்.
குளுமை போதாவிட்டால் கூட ஒன்றிரண்டு ஐஸ் கட்டிகளும் போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் செய்தால் வெண்ணைய் நன்கு திரண்டு மேலே வந்துவிடும்.










நன்கு நீரில் அலச வேண்டும்


மாட்டுப்பால் வெண்ணைய்

எடுத்த வெண்ணைய் அடுத்த நிமிடம் காலியாயிற்று :)
தினமும் இரவு வேளையில் ஒரு சிறு உருண்டை வெண்ணைய் சாப்பிட்டால் தோல் மிருதுவாக இருப்பதுடன், குடல் நோய்கள் வராது.

பிறகு ஒரு நாள் யாருக்கும் தெரியாம வெண்ணைய் எடுத்து, புகைப்படம் எடுத்தது..
க்ருஷ், க்ருஷி கண்ணுக்கு தட்டுப்படாமல் கவனமாக எடுக்கப்பட்ட வெண்ணைய் :))

 எடுத்த வெண்ணையை நெய்யாக்கியது எப்படினு பாருங்களேன்!!

                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்