எங்கள் வீட்டுக்கே மஷ்ரூம் கொண்டுவருவார் ஒரு பெரியவர். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களாக வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் என்ன, இன்னநாள் தான் என்ற கணக்கில்லை, எப்பவாவது வருவார்.
எங்கள் தெருவில் இருக்கும் அனைவருமே வாங்குவது வழக்கம்.
அதனால் எங்கள் வீட்டில் திடீர் காளான் குழம்பு, காளான் ப்ரியாணி எல்லாம் செய்வது உண்டு. அதே போல் இன்றும் வாங்கினோம்.
கூடவே ரெடிமேட் இடியாப்பம், ஒப்பிட்டு (போளி), பரோட்டா எல்லாமே இருக்கும்.
இது வரை காளான் மட்டுமே வாங்கியுள்ளேன். சிப்பிகாளான், மொட்டுகாளான் இரண்டு வெரைட்டியும் கொண்டு வருவார்.
இரவு உணவுக்கு சப்பாத்தியும், காளான் க்ரேவியும் தயாரித்து சாப்பிட்டும் ஆச்சு. சுவை மிகவும் நன்றாக இருந்தது.
தேவையான பொருட்கள்:
மொட்டு காளான்.........1 பாக்கெட்
தக்காளி...........2
பெரியவெங்காயம்......2
குடைமிளகாய்.............1
மிளகாய்தூள்.............2 மேசைக்கரண்டி
மல்லித்தூள் ................2மேசைக்கரண்டி
சீரகத்தூள்...............1 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டுபேஸ்ட் ............. 1மேசைக்கரண்டி
உப்பு.................தேவையான அளவு
மல்லித்தழை...........கைப்பிடி அளவு
ரீஃபைண்ட் கடலை எண்ணய்........2 மேசைக்கரண்டி
செய்முறை:
காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை சதுர துண்டுகளாக நறுக்கவும்.
குடை மிளகாயை நடுத்தர அளவு துண்டுகளாக்கி வைக்கவும்.
தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக்கி வைக்கவும்.
சீரகப்பொடி இல்லையென்றால், சீரகத்தை வெறும் வாணலியில் குறைந்த தணலில் வறுத்து பொடிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்த உடன் எண்ணைய் ஊற்றவும்.
எண்ணைய் காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு மிதமான பொன்நிறமாக வதக்கவும்.
அதன்பின் தக்காளி கூழை ஊற்றி வாசனை போகும் வரை கிளறவும்.
பொடிவகைகளைப் போட்டு கிளறி, பின்பு காளானை போட்டு கிளறிவிட்டு தீயை குறைத்து மூடி வைக்கவும். காளான் நீர் விட்டு வரும்.
அதன் பின் குடைமிளகாயைப் போட்டு கிளறி விடவும்.
2 நிமிடம் 1/2 கழித்து நீர் விட்டு உப்பு போடவும்.
நன்கு வெந்து நீர் வற்றியவுடன், மல்லித்தழை தூவி அடுப்பை நிறுத்தவும்.
சப்பாத்தி, பரோட்டா, புலாவிற்கு சிறந்த இணை உணவாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உழைப்புக்கு மாற்று உழைப்புதான்; வளர்ச்சி அடைவது, உங்கள் செயல்பாட்டை பொறுத்தது.
_()_()_()_()
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்