நாம நினைச்'சிட்டு' இருக்கலாம், குழந்தை வளர்ப்பு, குடும்பப்பராமரிப்பு இவற்றிலெல்லாம் மனிதப்பிறவியான நம்மை விட சிறப்பா வேற யாரும் இருந்துட முடியுமானு!!
இந்த குருவி, அம்மா வீட்டுல கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிச்சிருக்காங்க. எனக்கு இவங்களோட வரலாறு என்னனு தெரில. பேரும் தெரில.
எங்க வீட்ல வெளிய திண்ணை இருக்கும். அந்த திண்ணைக்கு கீழ இருக்கும் வாசலுக்கு வெயில் படாம இருப்பதற்காக தென்னை ஓலைகளை வெட்டி, தடுக்குகளாக பின்னி பந்தல் வேய்திருப்போம். வேப்பமர நிழலும், தென்னை ஓலை பந்தலும் அக்குருவிக் குடும்பத்தை மிகவும் ஈர்த்துவிட்டது போலும்.
நேற்று போனப்ப, அந்த பந்தக்காலோட மேல்முனையில அழகா ஒரு குருவிக்கூடு, கூட்டுக்குள்ள மூணு குருவிக்குழந்தைங்க. அப்பாவும், அம்மாவும் அதற்கு இரை தேடி கொண்டு வந்து கொடுத்தாங்க.
இரை ஒருமுறை மட்டும்தான் கொடுப்பாங்கனு என்னைப் போலவே நினைப்பவர்கள் யாரேனும் இருந்தால், அந்நினைப்பை மாத்திக்கோங்க!!!
ஒவ்வொரு ஐந்து அதிகபடசம் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அம்மாக்குருவியும், அப்பாக்குருவியும் தேடி தேடி இரை சேகரம் செய்து கொண்டுவந்து ஊட்டிவிட்டாங்க.
வருவதற்கு முன்பாக கிக்கிக்கீச் கீச் என்பது போன்ற சத்தம், உடனே குருவிக்குழந்தாய்கள் அனைவரும் தமது செப்பு வாயை திறந்தபடி இரை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
படக்னு குடுத்த அடுத்த நொடி பறந்துடுவாங்க.
இணைகள் இரண்டும் வெவ்வேறு விதமான உணவுகளையே கொண்டுவந்தனர்.
ஒருவர் மாற்றி ஒருவர் என்பதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தனர். இதெல்லாமே வியப்பை உண்டு பண்ணியது.
ஒரு முறை கொடுக்கும் போது பெரிய இரையாகப்போய்விட்ட படியால் (எங்கே குழந்தையின் தொண்டையில் மாட்டிவிடுமோ என்று நினைத்தது போல)அப்பாவா, அம்மாவானு தெரில, படக்னு தானே விழுங்கிட்டு, மீண்டும் சென்று சரியான அளவினதாக கொண்டுவந்து ஊட்டிவிட்ட செயல் ஆச்சர்யமாக இருந்தது.
செர்லாக் கலந்தா நாம ஒருவாய் சாப்பிட்டு பார்த்து கொடுப்பமே அது போலவேதான்னு வெய்ங்களேன்.
அன்பும், பாசமும், அக்கறையான பராமரிப்பும் கொண்ட அக்குருவிக்குடும்பம் மனதில் பல்வேறு உணர்வுகளை உணர்த்திச் சென்றது.
என் சுயநலத்திற்காக அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால், என்னால் மிகவும் துல்லியமாக படம்பிடிக்க இயலவில்லை.
இல்லேனாலும் அப்பிடியே துல்ல்ல்ல்ல்லியமாத்தேன் படம்புடுச்சுடுவே போ....இப்படி யாரும் நினைக்கலேதானே!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
நேற்று நடந்ததைப் பற்றியும், நாளை நடக்கப்போவதைப் பற்றியும் கவலைப்படாமல், இன்று நடக்கவேண்டியதை சிரத்தையுடன் செயல்படுத்தினால், வெற்றி உங்களைத் தேடி வரும்.
_()()_()()_
இந்த குருவி, அம்மா வீட்டுல கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிச்சிருக்காங்க. எனக்கு இவங்களோட வரலாறு என்னனு தெரில. பேரும் தெரில.
எங்க வீட்ல வெளிய திண்ணை இருக்கும். அந்த திண்ணைக்கு கீழ இருக்கும் வாசலுக்கு வெயில் படாம இருப்பதற்காக தென்னை ஓலைகளை வெட்டி, தடுக்குகளாக பின்னி பந்தல் வேய்திருப்போம். வேப்பமர நிழலும், தென்னை ஓலை பந்தலும் அக்குருவிக் குடும்பத்தை மிகவும் ஈர்த்துவிட்டது போலும்.
நேற்று போனப்ப, அந்த பந்தக்காலோட மேல்முனையில அழகா ஒரு குருவிக்கூடு, கூட்டுக்குள்ள மூணு குருவிக்குழந்தைங்க. அப்பாவும், அம்மாவும் அதற்கு இரை தேடி கொண்டு வந்து கொடுத்தாங்க.
இரை ஒருமுறை மட்டும்தான் கொடுப்பாங்கனு என்னைப் போலவே நினைப்பவர்கள் யாரேனும் இருந்தால், அந்நினைப்பை மாத்திக்கோங்க!!!
ஒவ்வொரு ஐந்து அதிகபடசம் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அம்மாக்குருவியும், அப்பாக்குருவியும் தேடி தேடி இரை சேகரம் செய்து கொண்டுவந்து ஊட்டிவிட்டாங்க.
வருவதற்கு முன்பாக கிக்கிக்கீச் கீச் என்பது போன்ற சத்தம், உடனே குருவிக்குழந்தாய்கள் அனைவரும் தமது செப்பு வாயை திறந்தபடி இரை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
படக்னு குடுத்த அடுத்த நொடி பறந்துடுவாங்க.
இணைகள் இரண்டும் வெவ்வேறு விதமான உணவுகளையே கொண்டுவந்தனர்.
ஒருவர் மாற்றி ஒருவர் என்பதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தனர். இதெல்லாமே வியப்பை உண்டு பண்ணியது.
ஒரு முறை கொடுக்கும் போது பெரிய இரையாகப்போய்விட்ட படியால் (எங்கே குழந்தையின் தொண்டையில் மாட்டிவிடுமோ என்று நினைத்தது போல)அப்பாவா, அம்மாவானு தெரில, படக்னு தானே விழுங்கிட்டு, மீண்டும் சென்று சரியான அளவினதாக கொண்டுவந்து ஊட்டிவிட்ட செயல் ஆச்சர்யமாக இருந்தது.
செர்லாக் கலந்தா நாம ஒருவாய் சாப்பிட்டு பார்த்து கொடுப்பமே அது போலவேதான்னு வெய்ங்களேன்.
அன்பும், பாசமும், அக்கறையான பராமரிப்பும் கொண்ட அக்குருவிக்குடும்பம் மனதில் பல்வேறு உணர்வுகளை உணர்த்திச் சென்றது.
சிட்டுக்கு ச்செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளச்சதாம்... |
என் சுயநலத்திற்காக அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால், என்னால் மிகவும் துல்லியமாக படம்பிடிக்க இயலவில்லை.
இல்லேனாலும் அப்பிடியே துல்ல்ல்ல்ல்லியமாத்தேன் படம்புடுச்சுடுவே போ....இப்படி யாரும் நினைக்கலேதானே!!
இந்த பதிவு எழுதும் போது அலைமோதிய எண்ணத்தின் ஒரு துளி: நாமளும் இப்படித்தானே சிறகு முளச்சு (திருமணம் முடித்து) தாய் வீடு விட்டு வரோம். ஆனால் அந்த பழைய வாழ்க்கை ஒரு துளிகூட மறப்பதில்லைதானே... அப்பா, அம்மா, அண்ணா, அக்கா....இந்த குருவிக்குடும்பம் ஏனோ என் பழைய நினைவுகளை அப்படியே புரட்டிச் சென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
நேற்று நடந்ததைப் பற்றியும், நாளை நடக்கப்போவதைப் பற்றியும் கவலைப்படாமல், இன்று நடக்கவேண்டியதை சிரத்தையுடன் செயல்படுத்தினால், வெற்றி உங்களைத் தேடி வரும்.
_()()_()()_