நிலவேம்பு கஷாயத்தை கடந்த சிக்குன்குணியா சீசனில் தொடர்ந்து குடித்து வர, எங்கள் வீட்டில் யாருக்கும் அந்நோயின் தொல்லை தொற்றவில்லை.
நிலவேம்பு பொடியின் கசப்பு தன்மையை நினைத்தாலே அக்கசப்பு நாவில் உலாவருவது போன்று தோன்றும்.
எட்டிக்கசப்பு என்று அதிக கசப்புக்கு உதாரணம் கூறிக் கேட்டிருப்போம். ஆனால் நிலவேம்பு கசப்பானது அதையும் தாண்டுமோ என்று நினைக்கவைக்கும் அளவு இருக்கிறது.
அப்பொடி பாக்கெட்டை திறந்தாலே, நாசியில் ஏறிய கசப்பு, தொண்டை வரை பயணம் செய்வதை நாம் உணரமுடியும்.
நோயின் தாக்கமும், அதனால் உண்டாகும் பின்விளைவும் இக்கசப்பினை மறுக்காமல், மறக்கசெய்து குடிக்கவைத்து விடும்.
இன்னும் கூட எனக்கு தெரிந்த ஒருவர் இந்நோயின் தீவிரத்தால் நடை தளர்ந்து போய்தான் காணப்படுகிறார். கை, கால், விரல் எலும்பு இணைப்புகள் அனைத்தும் வலியினால் நோகடிக்கின்றது எனவும் கூறுவார்.
தற்போது எங்கள் ஊரில் பன்றிக்காய்ச்சலின் தீவிரம் தலைதூக்கியுள்ள இவ்வேளையிலே இப்பொடியினை பயன்படுத்த துவங்கியுள்ளோம்.
நோய் தடுப்பு முறைகளை நாம் துவக்குவோம், அதற்குமேல் வருவதும், வராமல் போவதும் கடவுளின் கையில்தான் உள்ளது.
இதற்கு முன் வாங்கியது பொடியாக இருந்தது. ஆனால் இந்த முறை வாங்கியது படத்திலுள்ளது போல, பட்டைகளும், வேர்களும் கலந்த கலவையாக இருக்கின்றது.
செய்முறை:
ஒரு மேசைக்கரண்டி பொடி எடுத்துக்கொள்ள வேண்டும். கீழே எடுத்திருப்பது அரை மேசைக்கரண்டி மட்டுமே, இன்றுதான் ( ஓரிரு வருடங்களுக்கு பிறகு) முதல்முறை என்பதால் நானும், என்னவரும் முதலில் குடித்துப்பார்த்து பின்னர் மகனுக்கும், மகளுக்கும் கொடுக்கலாம் என நினைத்திருக்கிறோம்.
2 டம்ளர் தண்ணீரில் இப்பொடியை போட்டு, 1 டம்ளராக சுண்டக்காய்ச்சி, ஆளுக்கு 1/2 டம்ளர் குடித்துவிட்டோம். கசப்புதான் பொறுக்க முடில :(
எச்சரிக்கை:
மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே இதனை உட்கொள்ளவேண்டும்.
கண்டிப்பாக கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தகுந்த மருத்தவ ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
நாம் அனுபவிக்கும் எல்லாப் பொருட்களும் இயற்கையிடமிருந்தே நமக்கு கிடைக்கின்றன.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்