தக்காளி வெங்காயத்தை மூழ்கும் வரை நீர் விட்டு வேகவைக்கவும்.
சுத்தம் செய்த காளான், பெரியவெங்காயம், குடைமிளகாய்களை அரிந்து கொள்ளவும். சதுர துண்டுகளாக்கினால் நல்லது.
5 முந்திரி, 5 பாதாமை சுடுநீரில் ஊறவைத்து 2 கரண்டி பால் ஊற்றி அரைக்கவும்.
இஞ்சி, பூண்டை தோலுரித்து வைக்கவும். பூண்டு 8 பல்லு, இஞ்சி கட்டைவிரல் நீளம் எடுத்து தோலுரித்து நான்காக வெட்டவும்.
![]() |
2 கரண்டி பால் ஊற்றி அரைத்த பாதாம், முந்திரி |
வேகவைத்த தக்காளியை தோலுரித்து, பெரியவெங்காயத்துடன் அரைத்தெடுக்கவும்,
எண்ணைய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுதினை போட்டு வதக்கவும்.
குடமிளகாய் (பச்சை கலர்) போட்டு வதக்கி, அரைத்த பெ.வெங்காய, தக்காளி விழுதினை போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு காளானை போட்டு வதக்கவும்.
மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
அரைத்த முந்திரி, பாதாம் விழுதினை ஊற்றி, சிவப்பு குடை மிளகாயை போட்டு கிளறவும்,
நன்கு கொதித்து க்ரேவி பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு வேகவைக்கலாம்.
சப்பாத்தி, நாண், ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பாதாம், முந்திரியுடன் 10 உலர் திராட்சை சேர்த்து அரைத்துள்ளேன். இனிப்பு கலந்த சுவையுடன் விரும்புவர்கள் இதனை தேர்வு செய்யலாம்.
கசூரி மேத்தியை அடுப்பை அணைக்கும் 5 நிமிட இடைவெளியில் தூவவும்.
முந்திரி சேர்த்திருப்பதால் க்ரேவி அடிபிடிக்க வாய்ப்புள்ளது. அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்