திங்கள், 16 மார்ச், 2015

வெஜ் குருமா




இந்த குருமாவிற்கு, இந்த காய்கறிகள் மட்டும்தான் என்றில்லை. அவரவர்க்கு விருப்பமான காய்கறிகளை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் வண்ணமயமாக வேண்டும் என்று நினைத்தால் கூட ஒரு பீட்ரூட் சேர்த்து செய்யலாம்.

இக் குருமா,மிகவும் எளிமையான ஒன்று!!

கீழ்க்கண்டவாறு இக்குருமா செய்முறையினை பற்றி விரிவாகக் காண்போம்.
( மகளுக்கு தமிழ் ஆசிரியைப் பணியை செவ்வனே செய்வதால் அதே பாணியிலேயே எழுத்தும் பேச்சும் உள்ளது :))) )

தேவையான பொருட்கள்:

காய்கறிகள்.......தலா ஒரு கப் (நான் பயன்படுத்தியிருப்பவை = பட்டாணி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர்)

பெரியவெங்காயம்...........1

 அடிக்கோடிட்ட பொருட்களை அரைத்துக்கொள்க:

தக்காளி............2

இஞ்சி..............சிறு துண்டு

பூண்டு............6 பற்கள்

தேங்காய்........1/2 மூடி

பொட்டுக்கடலை......2 மேசைக்கரண்டி

வறமிளகாய்.......4 (காரத்திற்கேற்ப) 

கசகசா.......1/4 தேக்கரண்டி

சோம்பு..........1/2 தேக்கரண்டி

கிராம்பு.........2

பட்டை........சிறுதுண்டு

ஏலக்காய்.........2

முந்திரி........5 (விரும்பினால்)

தாளிக்க:

கடலை எண்ணய்...........1 மேசைக்கரண்டி

சோம்பு........1/4 தேக்கரண்டி

செய்முறை :

அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்தெடுக்கவும்.

கேரட், பீன்ஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

பச்சைப் பட்டாணியை தோலுரித்து வைக்கவும்.

காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் மஞ்சள்தூள், உப்புடன் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அடுப்பில் குக்கரை ஏற்றவும்.  குக்கர் சூடானவுடன் கடலைஎண்ணைய் ஊற்றி, காய்ந்தவுடன் சோம்பு போடவும்.

சோம்பு பொரிந்தவுடன் பெரியவெங்காயம் போட்டு நிறம்மாறும் வரை வதக்கவும்.

பின்னர் அரைத்தவற்றைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் காய்கறிகள் அனைத்தையும் போட்டு வதக்கி, தேவையான அளவு நீர்விடவும்.

உப்பு சரி பார்த்து குக்கரை மூடிவைக்கவும். குக்கர் ஆவி வந்தவுடன் வெயிட் போட்டு, நான்கு சத்தம் விடவும்.

ஆவி முற்றிலுமாக இறங்கியவுடன் குக்கரை திறந்து, குருமாவினை கரண்டியால்  நன்கு கலக்கிவிடவும். தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து பொடியாக்கிய மல்லிதழையை பொடியாக அரிந்து,  மேலேதூவி பரிமாறவும்.

விளக்கமான படங்களை கீழே காணலாம் வாருங்கள்!!

























 இக்குருமா சப்பாத்தி, ரொட்டிக்கு சுவையானதொரு இணையுணவாகும். இவ்வாறாக சுவையானதொரு காய்கறிக்குழம்பினை எவ்வாறு தயாரிப்பது என்பதை மிகத்தெளிவாக பார்த்தோம்.

                                                            ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் புடித்தது:

 உனது கௌரவம் உனது நாக்கின் நுனியில் இருக்கின்றது.

                                                       _()_()_()_()_


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்