வெள்ளி, 13 மார்ச், 2015

புதினா பராத்தா

புதினா சப்பாத்தினு போடாம ஏன்? புதினா பராத்தானு போடுறீங்கனு என் மக்கட்செல்வங்கள் வினவினாங்க!!

சப்பாத்தினு சொல்றதை ஸ்டைலா பரா...த்தானு சொல்றேனு சொல்லிக்கிட்டேன்.

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு.............2 கப்

கடலை எண்ணைய்..........1 தேக்கரண்டி

உப்பு.........தேவையான அளவு

புதினா.......இரண்டு கைப்பிடியளவு (தோராயமாக)

செய்முறை:

கோதுமை மாவுடன், உப்பு எண்ணைய் கலந்து வைக்கவும்.

புதினாவை நன்கு கழுவி, பொடியாக அரிந்து மாவுடன் கலக்கவும். நான் பொடியாக நறுக்கவில்லை. இலைகள் அளவினில் சிறியதாக இருக்கவும் ஓரளவிற்கு அரிந்து போட்டேன்.

புதினாவையும் மாவுடன் கலந்து நன்கு இளக்கமாக பிசையவும்.

சப்பாத்தியாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து வைக்கவும்.

புதினா சப்பாத்தி என்கிற பராத்தா தயார்.

தயிர் பச்சடி அல்லது குருமா வகைகளுடன் சாப்பிடலாம். எங்கள் வீட்டில் பாசிப்பருப்பும், பீர்க்கங்காயும் போட்ட குழம்பு வைத்தேன். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.













 அவசரமாக சுட்டதினால் வட்டமாக வெட்டாமல் அப்படியே சுட்டு எடுத்துவிட்டேன். அதனால்தான் உலக நாடுகளின் வரைபடங்களை நீங்கள் கண்ணுற முடிந்தது :))


பீர்க்கங்காய் போட்ட பச்சபயிறு குழம்பு, பொரியல் சேனைக்கிழங்கு.

                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

ஆயிரம் முறை சிந்தியுங்கள், ஒருமுறை முடிவெடுங்கள்.

                                                               _()_()_()_()_

2 கருத்துகள்:


  1. வாழ்த்துக்கள் அருள் :)))
    ப்தினா பராட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. :)) நானும் இப்பத்தான் புதினா குச்சிகள் நட்டுள்ளேன். இலைகள் வந்ததும் செய்துப் பார்க்க்கிறேன். படங்கள் நல்லாயிருக்கு. அதுவும் புதினா தோப்புக்குள்(??) பராட்டா போஸ் கொடுப்பது சூப்பர்.:))

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி வாணி :) நிச்சயம் முயற்சி செய்யுங்கள். ஹா ஹா...புதினா தோப்பு!! :))

    பதிலளிநீக்கு

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்