புதன், 18 மார்ச், 2015

கம்பஞ்சோறு மற்றும் கம்பங்கூழ்



கம்பங்கூழ்
மதியம் பள்ளிக்கூடம் என்பதால், வேன் வரும் வரை கம்பங்ககூழ் குடிச்சு (குடிக்கவெச்சு) டைம்பாஸ் பண்ணும் எனது பொண்ணரசி :))

இந்த கம்பஞ்சோறாக்குற வேலை கொஞ்சம் கடுசுதான் போங்க!! கம்பு தோலோட இருந்துச்சுனு வெய்ங்க், அது அதவிட கடுசு!!

எங்கிட்ட இருக்கிறது தோலோடுதான். அதனை ஒரு 10 நிமிடங்கள் நீரில் போட்டு ஊறவெச்சேன்.
பொறவு நல்லா தண்ணிய சுண்ட வடிச்சிட்டு,  மிக்ஸில போட்டு ஒரு சுத்து விட்டேன். உடனே தோலெல்லாம் கழண்டுக்கிச்சு.
அப்பரமா அதைய தண்ணில போட்டு நல்லா கழிஞ்சேன். தவிடெல்லாம் வெளியேறி நல்லா சுத்தமாகிடுச்சு.
உடனே அதைய அளவா தண்ணி விட்டு கல் இல்லாம அரிச்சு, மறுக்கா மிக்ஸி ஜார்ல போட்டேன். இப்பவும் தண்ணிய சுண்ட வடிச்சு போடோணும்.

நல்லா ரவைய விட கொஞ்சம் நைசா வாராப்பில அரைச்சுக்கணும்.

இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடியே நாம எவ்வளவு கம்பு எடுக்கறோம்னு அளந்துக்கணும். அப்பத்தான் தண்ணி செரியா ஊத்தமுடியும்.

ஒரு கப் கம்புக்கு 3 கப் தண்ணி ஊத்தணும்.

உடனே அட இவ்வளவுதானா? எனக்குத்தான் இது தெரிமேனு நெனைக்காதீங்க. அப்பரமாத்தான் வேலையே இருக்கு.

குக்கர்ல கம்பு மாவுமில்லாத, ரவை பதமாவும் இல்லாதை போட்டு, தண்ணி ஊத்தி நல்லா கலந்து விட்டு, தண்ணி கொதிக்கிறாப்பில ஆனவுடனே குக்கர மூடி , ஆவி வெளிய வரத்துவங்கின உடனே வெயிட் போடணும்.

நல்லா 3, 4 சத்தம் போட விட்டுடணும். அப்பரமா அடுப்பை நிறுத்திட்டு, முழுசா ஆவி வெளியேறினப்புறம், குக்கரை நீக்கி, உள்ள இருக்கிற கலவைய நல்லா கலந்து விடணும்.

நெல்லுச்சோறாட்டம் , பக்குவமா ஆகி இருக்கும்னு தப்பு கணக்கு போட்டுடக்கூடாது.
அடில கெட்டியாவும், மேல தண்ணியாட்டவும் இருக்கும். நல்லா கலந்து விட்டு, மறுக்கா குக்கரை மூடி ஒரு ரெண்டு அல்லது மூணு சத்தம் விடணும்.

மறுக்கா அதே போல, ஆவி, வெயிட் இதெல்லாந்தான்.......

இப்ப கெளறுனா, ஓரளவுக்கு கெட்டியா இருக்கும்.
இந்த ஸ்டேஸ்(ஜ்)ல கை பொறுக்கிறாப்பில ஆனதுக்கப்புறமா, உருண்டைகளா உருட்டி, ஒரு குண்டால போட்டு, மூழ்கும் வரைக்கும் தண்ணிய ஊத்தி வெச்சுக்கிட்டு, ரெண்டு நாளைக்கு அதையே குடிக்கலாம்.
முக்கியமா ஃப்ரிட்ஜ்ல வெக்கிறது ரொம்ப நல்லது.

ஆனா பாருங்க  எனக்கு கொஞ்சம் உருண்டை பிடிக்க வரல.
அதுக்காக பூராவும் வீண் என்று மனம் தளர்ந்து விடக்கூடாது.
என்ன செய்யலாம்னா, குக்கர்ல இருந்து, கரண்டில அள்ளி வேற குண்டால போட்டு, நல்லா சமனா பண்ணி விடணும். கொஞ்ச நேரம் ஆறவிட்டா ஓரளவு இஞ்சிக்கும்.
அதுக்கு அப்பறமா மூழ்குற அளவுக்கு தண்ணிய ஊத்தி ஃப்ரிட்ஜ்ல வெச்சுக்கோணும்.
போடுறப்ப குழிக்கரண்டியால ஐஸ்க்ரீம் மாதிரி  போட்டுக்கலாம்.

இதுக்கு பச்சபயிறும் பீ(ர்)க்கங்காயும் போட்ட கொழம்பு நல்லா இருக்கும்.

தட்டப்பயிறும் சொ(சு)ரக்காயும் போட்ட கொழம்பும் நல்லா இருக்கும்.
தயிர் ஊத்தியும் சாப்பிடலாம்.

தண்ணியாட்டம் கரைச்சு, தயிர் போட்டு, உள்ள சின்ன வெங்காயத்தையும் மல்லி தழையும் பொடிசா நறுக்கி போட்டு குடிக்கலாம்.
நான் புதினா போட்டிருக்கேன்.

இந்த வெயிலுக்கு இது ரொம்ப ரொம்ப நல்லது.

படம் பாக்கலாம் வாங்க:

மிக்ஸியில் பொடியாக்கிய கம்பு

குக்கரை மூடி வெயிட் போடும் நிலையில்

முதல் முறை சத்தம் வந்து இறக்கிய பிறகு

இரண்டாம் முறை சத்தம் வந்து இறக்கிய பிறகு

உருண்டை பிடிக்க முடில

இப்படி போட்டு மூழ்கும் வரை நீர் விட்டாச்சு


கம்பு சோறு ஆக்கி முடிக்கிறதுக்குள்ள குக்கர் நிலமை இப்படி ஆகிடுச்சு :(





இவ்வளவு கஷ்டத்தையும் தாண்டி கூழ் தயார்!!
நிஜமாவே கம்பு சோறும், கூழும் அபார சுவையுடன் இருந்துச்சுங்க!!

                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்,  உன்னை வலிமை படைத்தவன் என்று நினைத்தால் வலிமையுடையவனாவாய்.
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

சுவாமி. விவேகானந்தர்.

                                                               _()_()_()_()_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்