தேவையான பொருட்கள்:
காளான்..........2 பாக்கெட்
பெரியவெங்காயம்.......1
தக்காளி..........1
மல்லிபொடி........1 மேசைக்கரண்டி
கரம்மசாலா பொடி........1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது.........1 மேசைக்கரண்டி
தனிமிளகாய் பொடி......1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
கறிவேப்பிலை...........2 இணுக்கு
குடைமிளகாய்........1 (விருப்பட்டால்)
மல்லி தழை.....கைப்பிடியளவு
கஸூரி மேத்தி.........1 தேக்கரண்டி
சோம்பு........1/4 தேக்கரண்டி
பட்டை.......சிறுதுண்டு
கிராம்பு........2
ஏலக்காய்......விரும்பினால்
உப்பு தேவையான அளவு
எண்ணைய் ........1 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் காளானை அதன் மேலுள்ள கருப்பு துகள்கள் போகும்படி கழுவி துடைத்து, நான்காக வெட்டி வைக்கவும்.
பெரியவெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.
குடைமிளகாயை சதுரதுண்டுகளாக நறுக்கி, லேசாக எண்ணைய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும். 5 நிமிடம் வதக்கினால் போதும்.
வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன், பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
நன்கு வாசனை வந்த பிறகு தக்காளியைப் போட்டு குழைய வதக்கவும்.
பொடிவகைகளை சேர்க்கவும்.
பின்னர் காளானை போட்டு வதக்கவும். உப்பு இந்த சமயத்தில் போடவும்.
வாணலியை மூடி வைக்கவும். தீ மிதமாக இருக்கட்டும்.
7 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறிவிடவும். நீர் சுண்டிவிடுமாயின் கொஞ்சமாக நீர்விட்டு, வதக்கிய குடைமிளகாயை போடவும்.
பின்னர் கஸூரி மேத்தியை கைகளால் அரக்கி போடவும்.
உப்பு சரி பார்த்து, மல்லி தழை தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
வாங்க போட்டோ பாக்கலாம்:
![]() |
கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) |
தயிர் சாதம், புலாவிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிய இலட்சியத்தில் வெற்றி அடைவதை விட, பெரிய இலட்சியத்திற்காக முயற்சி செய்வது மேலானது.
ஸ்ரீ அன்னை.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்