திங்கள், 23 மார்ச், 2015

தக்காளிச்சட்னி






தக்காளிச்சட்னி இதுவும் இரண்டு மூன்று விதமாக செய்யலாம். இந்த முறையில் செய்வது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

நாட்டுத்தக்காளி..........4 (நடுத்தர அளவிலானது) வெட்டும்பொழுது, காம்பின் அடையாளத்தை(கெட்டியான ) எடுத்துவிட்டு அரியவும்.

பெரியவெங்காயம்.....1

பூண்டு...........5பற்கள்

கறிவேப்பிலை......2 இணுக்கு

மல்லிப்பொடி......1 மேசைக்கரண்டி

புளி...சிறுநெல்லியளவு (பெங்களூர் தக்காளியாக இருப்பின் இன்னும் சிறிது சேர்க்கலாம்)

உப்பு.......தேவையான அளவு

 தாளிக்க:

சீரகம்........1 தேக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு

கடலைஎண்ணைய்.....1 மேசைக்கரண்டி
அரிந்த பெரியவெங்காயம், சீரகம், கறிவேப்பிலை (பொறுமையும் நேரமும் இருந்தால் சின்னவெங்காயம் போடலாம்).




1) கடலை எண்ணைய் 1 மேசைக்கரண்டி ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு சீரகம் போட்டு பொரியவிடவும்.

2) கறிவேப்பிலையை போட்டு, பெரியவெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

3). தக்காளியை நறுக்கி வைக்கவும்.

4) வதக்கியவற்றுடன் இதனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

 1 மேசைக்கரண்டி மல்லிப்பொடி சேர்க்கவும்.



சிறு நெல்லிக்காய் அளவு புளி சேர்க்கவும்.
 வதங்கிய கலவையின் அடிப்பகுதியில் புளியை ஒளித்து வைக்கவும்.
 ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
 சுவையான தக்காளிச்சட்னி தயார். இட்லி, தோசை, பணியாரத்திற்கு மட்டுமே தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

                                                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோவொரு இடத்தில், அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள்தாம், அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணம் ஆகும்.

சுவாமி. விவேகானந்தர்.

                                                                  _()_()_()_()_

2 கருத்துகள்:

  1. அருமை அட்டகாசம் அருளு அனைத்தும் அருமை உங்க எழுத்து திறமையை பற்றி கேட்கனுமா கலக்குங்க :) என் அன்பான வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களோட நம்பிக்கைக்கும், அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுவா :)

      நீக்கு

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்