புதன், 25 மார்ச், 2015

கோடையும் கொத்தமல்லியும் நானும்



கொத்தமல்லி பயிரிட விரும்பி, ஒரு கைப்பிடி அளவு மல்லி விதைகளை கைகளால் அரக்கி, இரண்டாக உடைத்து , காயர்பித் மற்றும் மென்யூரை சரியான விகிதத்தில் கலந்து வைத்திருந்த தொட்டியில் போட்டு கிளறி விட்டேன்.
காயர்பித் கலவைக்கு நீர் அதிகம் விடத்தேவையில்லை. ஒரு நாளைக்கு 1 முறை மட்டுமே ஒரு டம்ளர் அளவு நீர்விட்டாலே போதுமானதாக இருந்தது. வேணா கூட இன்னும் கொஞ்சூண்டு அதிகமா ஊத்திக்கலாம்.

ட்யூப் வழியாகவே நீர் பாய்ச்சிவிடுவதால், பூவாளியின் பயன் எங்களுக்கு இது வரை தேவையாயிருந்ததில்லை. ஆயினும் பூவாளி ஒன்று வாங்க வேண்டும் என்ற மிகப்பெரிய அவா இருந்து கொண்டே இருந்தது.

சமீபத்தில் ஒரு நர்ஸரிக்கு செடி வாங்க போனோம், அங்கு பூவாளியும் இருந்தது.
ஆனால் விலை கொஞ்சம் அதிகமோ என்று மனதிற்கு பட்டதால் என்னவரிடம் வேண்டாம் என கூறிவிட்டேன்.
ஒரு ப்ராடக்ட் எவ்வளவு உழைப்பு,பொருட்செலவு, நேரச்செலவு செய்து தயாரிக்கணும் தெரியுமா? போற போக்குல வெலை அதிகம்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்கிறது சரியா? ஆச்சா, போச்சான்லாம் அறிவுரையை ஆரம்பிச்சார்.இருந்தாலும் நம்ம சிக்ன நடவடிக்கையால வாங்கல.

ஆனா இந்த கொத்தமல்லி விதை முளைக்க ஆரம்பிச்சவுடனே தண்ணிய நேரிடையா ஊத்தினா அடிப்பட்ட குருவி மாதிரி சாய்ஞ்சிடுது. பூவாளியோட தேவை நிச்சயம் வேணும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆனா பாருங்க என்னோட்ட அறிவான மூளையை பயன்படுத்தி, கீழ் உள்ள பூவாளிய (!!??) தயாரிச்சுப்புட்டம்ல!!

ஒரு காலி தண்ணி பாட்டில் மூடிய, மைகோதி அல்லது பணியாரம் திருப்பியோட கூரான பகுதிய வெச்சு நாலஞ்சு ஓட்டை போடணும்.
பாட்டில்ல தண்ணிய நிரப்பி, மூடிய போட்டு ஊத்துனா, ஆஹா, என்ன அழகு, செடி அடிபடாம தண்ணி ஊத்திடலாம்.


மெதுவா வெளிய எட்டிப்பாக்குறாங்க


கொஞ்சம் கொஞ்சமாக உலகினைக்கான....வெளியே வந்தார்கள்

ஏய்!! வாங்கப்பா எல்லாரும் வெளிய, இங்க ஒரு அழகான உலகம் இருக்கு!!

அறிவாளியின் பூவாளி

ஹே..!!!

ஸூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கொத்தமல்லி நிழலான இடத்திலும் வளர்ந்துவிடுகிறது. ஒரு இடத்தில் சிறிய அளவில் போட்டு 10 நாட்கள் கழித்து, வேறு தொட்டியிலோ, இடத்திலோ மீண்டும் ஒருமுறை போட்டால், மல்லி இழை தட்டுப்பாடு இல்லாமல் நம் வீட்டு தோட்டத்திலேயே பறித்துக்கொள்ளலாம்.
கோடை வெயில் கொளுத்தினாலும் கொத்தமல்லி குளுகுளுனு பறிச்சுக்கலாம்!!

                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.

                                                             _()()_()()_

2 கருத்துகள்:

  1. அறிவாளியின் பூவாளி நல்லாயிருக்கு:-)
    நான் கொத்தமல்லி விதைக்கப் போட்டேன் ( இரண்டு முறை) அருள். முளைத்து வெளியே வர துவங்கியதும் பூக்கள் வந்து அதன் பின் வளரவில்லை. எதினால் அப்படி ?

    பதிலளிநீக்கு
  2. வாணி மிக்க நன்றி :) நாட்டுக் கொத்தமல்லி சிறு செடியாக இருக்கும் போதே அறுவடை செய்திடவேண்டும். பூ வந்த பிறகு வளராது. நீங்கள் பயன்படுத்திய விதையை மாற்றிப் பாருங்கள் வாணி. இங்கேயும் சிறு செடியில் பூக்கள் வரும். ஆனால் சிறு செடியாக வளரும் மல்லி நல்ல வாசனையுடன் இருக்கும். இங்கு கடைகளில் இது போன்று கிடைப்பது வெகு அபூர்வம். ஹைபிரட் வகைதான் வரும்.

    பதிலளிநீக்கு

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்