ஒரு நாளு, இ னு கேளுங்க.. ஒரு நாளு நானு கிச்சன்ல வேலையா இருந்தேன். அப்ப திடீர்னு ஒரு சத்தம், விர்ர்னு, நாங்கூட ஏதோ இந்த பறக்கும் தட்டு, பறக்கும் தட்டுனு சொல்றாங்களே அதோ என்னமோனு குபீர்னு ஜன்னல் வழியா பாத்தா, ஜிவ்வ்வ்வ்வ்வ்னு பறந்து வந்து உக்காந்தாங்க இந்த மயிலக்கா, இல்லீங் மயிலண்ணன்.
அப்பரம் என்ன கேமராவும் கையுமா அப்பிடியே எடத்த உட்டு அசையாம நின்னுட்டம்ல.
 |
வெளிய நடலாம்னு வாங்கின அரளிப்பூச்செடியவே உத்து பாத்தாங்க |
 |
தலைய சாய்வா வெச்சு வேறென்ன தேறும்னு பாத்தாங்க |
 |
வந்த களப்பு தண்ணி குடிக்கலாமானு யோசனைல இருந்தாங்க |
 |
குடிச்சுதான் பாப்பமேனு |
 |
இந்தூட்டு அம்மிணி ரொம்ப நல்லவ, நல்லதண்ணியாத்தான் இருக்கோணும்னு நினைச்சு குடிச்சாங்க :)) |
 |
நின்னு நோட்டமிட்டாங்க, எதாவது தேறுமா? |
 |
அங்க என்னமோ கண்ணுக்கு தட்டுப்படுதே!! |
 |
சுத்தி சுத்தி வந்தீக!! |
 |
கேமராவ நிறுத்து!!!! |
 |
ஐ!! நந்தியாவட்டை, ஆனா என்னோட கொண்டையவிட அழகா என்ன? |
 |
ச்சே ஒரே போர்ப்பா.. |
 |
மயில் நட நடந்து கெளம்பிட்டாங்க |
இந்த படம் பார்த்த குட்டீஸ்க்கெல்லாம் ஒரு பாடல். நான் சின்ன வயசில பாடியது (படிச்சது :))
மயில் ஒன்று ஆடுது
மந்தியெல்லாம் கூடுது
குயில் ஒன்று பாடுது
குருவியெல்லாம் கூடுது
மயிலப் பாத்து குயிலப் பாத்து
மந்தி தலைய ஆட்டுது!!
ரொம்ப வருஷம் முன்னாடி படிச்சதினால, இதில் குற்றங்குறை ஏதேனும் இருந்தால் பொருத்தருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
 |
வந்த சோலிய முடிச்சாச்சுனு.... ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு இருந்த பெரிய வெங்காயத்தாள முடிச்சுப்புட்டுள்ள கெளம்புனாங்க..அவ்வ்வ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
_()_()_()_()_
| | | | | | | | | |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்