தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு........1கப்
உருளைக்கிழங்கு.......1 (நடுத்தர அளவிலானது)
பச்சைமிளகாய்........2 (காரத்திற்கேற்ப)
பச்சரிசி மாவு.......2 மேசைக்கரண்டி
இஞ்சி............சிறுதுண்டு (விரும்பினால் பொடியாக அரிந்து சேர்க்கலாம்)
கறிவேப்பிலை........5 இணுக்கு
மல்லிதழை.....கைப்பிடியளவு
பெரியவெங்காயம்.........1
உப்பு.......தேவைக்கேற்ப
எண்ணைய்....பொரிப்பதற்கு
செய்முறை:
பாசிப்பருப்பை நன்கு கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பருப்பினை நன்கு தண்ணீரை வடிகட்டி வைக்கவும். துளிகூட நீரில்லாமல் இருப்பது அவசியம்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
கறிவேப்பிலை, மல்லிதழை மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் மிளகாய் மற்றும் பாசிப்பருப்பை போட்டு நீர் விடாமல் இரண்டு, மூன்று சுற்றுகள் விட்டு, பிறகு உருளைக்கிழங்கை போட்டு அரைத்து எடுக்கவும்.
அரைத்த பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், அரிசி மாவு, மல்லிதழை, கறிவேப்பிலை போட்டு நன்கு கலந்து, சிறிது சிறிதாக எடுத்து எண்ணைய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான, சத்து நிரம்பிய பாசிப்பருப்பு வடை தயார்.
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த வடை இது.
கிட்டத்தட்ட உளுந்து வடை போலவே இருக்கும்.
எண்ணைய் அதிகம் இழுக்காது.
பாசிப்பயறை ஊறவைத்தும் செய்யலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
தோல்வி என்பது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்