என் முதல் முயற்சி!! இதை விட ஒண்ணு சொல்லியே ஆகணும், முதல் முறையாக அகர் அகர் பார்க்கிறேன்.
நிறைய பிளாஹ்களில் இதனைப்பற்றிய குறிப்புகளை கண்ணுற்றிருக்கிறேன். ஆனா அதிலெல்லாம் சன்னமாக சேமியா போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.
எங்க வீட்டுக்கு அருகில்னா ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில புதுசா ஒரு சூப்பர்மார்கெட் திறந்திருந்தாங்க. கலர்கலரா லைட்டெல்லாம் போட்டு அமர்க்களமா இருக்கவும். உடனே உள்ளே போய் பார்க்கலாம்னு போனோம்.
ரொம்ப நாளா மனதிலிருந்த சைனாக்ராஸ் கண்ணுக்கு தட்டுப்படவும் வாங்கியாந்துட்டோம்.
இதனைப் பற்றிய தகவல்களுக்குஇங்கே சென்று பார்க்கலாம்.
ஆமா இது செமக்க முடியாத அளவுக்கு பெரிய்ய் செமை பாருனு, இதனை பயன்படுத்தியவர்களுக்கு தோன்றலாம்.
ஆனா பாருங்க என்னையாட்டம் இருப்பவங்களுக்கு இது ஏதோ பெரிய விஷயம்னுதான் தோணும்.
அட ஒண்ணுமே இல்லீங்க, வெறும் அட்டப்பொட்டியோனு ஒரு சந்தேகம் கூட வந்துச்சு. 40 ரூபாய் ஏமாந்துட்டமோனும் நினைக்காம இருந்தா தப்புதானே?? அதுனால அப்பிடியும் நினச்சேன்!!
(தீப்பொட்டி சைஸ் அட்டப்பொட்டிக்குள்ள இவ்வளவு அதியமானு ஆச்சர்யப்பட்டு போனேன்!!)
கொஞ்சூண்டு நொரையாட்டம் பாலீதீன் கவர்ல இருப்பதுதான் அகர் அகர் எனப்படும் கடற்பாசி.
கற்பாசி மட்டுமே (ப்ரியாணி, குருமா) இதுவரை பயன்படுத்தி இருக்கேன். கல்பாசிக்கும் கடற்பாசிக்கும் ஓரெழுத்து வித்யாசம்தான் ஆனால் குணமோ வெவ்வேறானவை.
அகர்பத்தி மட்டுமே தெரிஞ்ச எனக்கு இந்த அகர் அகர் புத்தம்புதுசுங்க!!
செய்முறைக்கு போவோம்!!
தேவையான பொருட்கள்:
அகர் அகர்.... 10 கிராம்பெட்டி
பால்....1/2 லிட்டர்
தண்ணீர்....3/4 கப்
சர்க்கரை...1/4 கப்(விருப்பத்திற்கேற்ப)
ரோஸ் எசென்ஸ்... 1 அல்லது 2துளிகள்
பீட்ரூட்....சிறுதுண்டு
செய்முறை:
பீட்ரூட் சிறுதுண்டினை தோல்சீவி மிக்ஸியில் சின்னஜாரில் 1/4 டம்ளர் நீர் விட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அடுப்பிலேற்றி அகர் அகர் போட்டு கரையவிடவும்.
பக்கத்து அடுப்பில் பாலினை ஊற்றி காய்ச்சவும். கூடவே சர்க்கரையும் போட்டு கிளறவும்.
அகர் அகர் கரைந்தவுடன் வடிகட்டியில் வடித்து பாலினுள் ஊற்றவும். வடித்த பீட்ரூட் சாறையும் ஊற்றி கிளறவும். ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.
ஆறியவுடன் பிடித்த மோல்டுகளில் ஊற்றி ஃப்ரிட்ஜில் அரை மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.
சுவையான இனிப்பு தயார்!!
பீட்ரூட் சாறு சரியான சாயமேற்றி...ஃபுட்கல்ர் ஏதுமே பயன்படுத்தவில்லை.
பீட்ரூட்டினை பாலூற்றி அரைத்ததாலோ, இல்லை பாலினுள் பீட்ரூட் கலந்ததாலோ கலவை திரிந்தாற் போல் ஆயிற்று. ஆனால் சுவை குறையவில்லை.
உடலுக்கு குளிர்ச்சி தரும் இன்னும் பலப்பல அகர் அகர் குறிப்புகளை காண நேரிடும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இதனை எழுதும் தருவாயில் என் மகன் என்னிடம், அம்மா அக்கா கேட்கிறாங்க (என் அக்கா மகள்) எப்படி இருந்துச்சுனு..வாட்ஸாப்பில் அனுப்பியதன் விளைவு....
அதற்கு என் மகள் கூறுகிறாள்... டேய் நல்லா இருந்துச்சுனே சொல்லிடுடா.. வேற வழியே இல்லை...அவ்வ்வ்...
இதனைக்கேட்டு என் இதயம் இப்படி சிதறிடுச்சு...
ஹீ!! ஹீ!! இப்பிடிலாம் புது பலகாரம் செய்யீல கொஞ்சம் அப்பிடி இப்பிடினுதான் ஆகும்னு சொல்லி மறுக்கா என் இதயத்தை ஒட்ட வெச்சுக்கிட்டேன்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது!!
புது விஷயங்களில் இருந்து ஒதுங்கக்கூடாது. திறமை மிக்கவர்களின் கீழ் பணியாளாக இருந்து தொழிலைப் பழகிக் கொள்ள வேண்டும்.
--பாரதியார்
Super.
பதிலளிநீக்குநன்றி சுபி :)
நீக்கு