ஞாயிறு, 12 ஜூலை, 2015

வெந்தயக்கீரை காளான் ப்ரியாணி/ Methi Mushroom Biryani






வெந்தயக்கீரை காளான் ப்ரியாணி சுவையும் மணமும் நிறைந்தது.

தேவையான பொருட்கள்:

மொட்டுக்காளான் ...2 பாக்கெட்

பாஸ்மதி அரிசி.... 500 கிராம்

வெந்தயக்கீரை....2 கைப்பிடி அளவு

பெரிய வெங்கயாம்...2

தக்காளி....1

எலுமிச்சை...1/2 மூடி

தயிர் ஆடை...1 மேசைக்கரண்டி

நெய்....1 மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால்)

கடலெண்ணய்...1 மேசைக்கரண்டி

உப்பு....தேவையான அளவு

அரைக்க:

இஞ்சி....பெருவிரல் அளவு துண்டு

பூண்டு......15 பல்

பச்சை மிளகாய்...2

வறமிளகாய்...3

பட்டை...1 அங்குலத்துண்டு

கிராம்பு.....2

கசகசா...1/2 தேக்கரண்டி

சோம்பு...1 மேசைக்க்ரண்டி

ஏலக்காய்...3

அன்னாசிமொக்கு...1

மராட்டி மொக்கு...1/2 யாக உடைத்தது

ஜாதிக்காய்...சிறு துண்டு

தக்காளி....2



காளானை சுத்தம் செய்து இரண்டாக வெட்டி வைக்கவும். வெங்கயாத்தை நீளவாக்கில் சன்னமாக வெட்டி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைத்து வைக்கவும். புதினாவை நீரில் போட்டு வைத்து, நன்கு கழுவி வைக்கவும். வெந்தயக்கீரையை இலைகளை மட்டும் பறித்து சுத்தம் செய்து வைக்கவும்.

பாஸ்மதி அரிசியை அளந்து,  மூன்று முறை கழுவி ஒன்றுக்கு இரண்டு பங்கு நீர்விட்டு, அதில் எலுமிச்சையை கொட்டைகளில்லாமல் பிழிந்து வைக்கவும்.




அடுப்பில் குக்கரை ஏற்றி சூடானவுடன் எண்ணைய் ஊற்றவும். காய்ந்தவுடன் சோம்பு தாளித்து அரிந்த வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வதக்கவும். பின்பு அரைத்த விழுதினைப்போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


பின்பு தக்காளியைப் போட்டு வதங்கியவுடன், காளானைப் போட்டு நீர்விடும் வரை வதக்கவும்.
பின்னர் தயிர் ஆடையை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நன்கு கிளறிவிட்டு, அளந்து வைத்த நீரினை விட்டு உப்பு சரி பார்த்து குக்கரை 3 விசில் விடவும்.
ஆவி அடங்கியவுடன் எடுத்து, அரிசியைப் போட்டு,  மீண்டும் குக்கரை மூடி மேலே அவி வந்த பிறகு, வெயிட்போட்டு சரியாக 7 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
ஒரு வேளை 7 நிமிடங்களுக்கு மேலாகி விட்டால், குக்க்ரின் வெயிட்டினை மேலே படத்திலுள்ளவாறு ஆவியை வெளியேறச் செய்யலாம். முழுவதுமாக பிடுங்கி எடுக்கக்கூடாது.
சூடான சுவையான ப்ரியாணி தயார்!!



வெங்காய பச்சடியுடன் பரிமாறவும். ஆனியன் ரைத்தாகாண இங்கே செல்லவும்.

படித்ததில் பிடித்தது:

திறமை எல்லாருக்கும் இருக்கிறது; அது நடத்திச் செல்லும் இருண்ட, பாதைகளில் பின் தொடரத்தான் துணிச்சல் தேவைப்படுகிறது.

                                                                _((()))_ 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்