வியாழன், 2 ஜூலை, 2015

பால் வண்ண நிலவு..!!






நிலவு எத்துனை முறை பார்த்தாலும் சலியாது. எப்படி இரயில், யானை எல்லாம் பார்க்க பார்க்க, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அது போலத்தான் நிலாவும்.

நிலாவப் பத்தி பேசறனா கண்டிப்பா, சிறுமியாய் இருந்த போது பேசியவை இல்லாமல் இருக்குமா என்ன?

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் தகதகவென ஜொலித்துக் கொண்டு கீழ்வானில் ஆரஞ்சு உருண்டையாய் மேலெழும்பு காட்சி காணக் கண் கோடி வேண்டும்.
அப்படி தோன்றும் நிலவை, அப்பா.... எத்தன அழகா இருக்குல ஆத்தா!! என்று என் பாட்டியிடம் வாய்பிளக்க கூறுவேன்.
ஒவ்வொரு முறையும் அவர் தவறாது சொல்வது இதுதான்,
"அப்பிடிலாம் சொல்லப்படாது... நிலாவும் சாமிதான் " என்று சொல்வார்கள்.

அப்பிடினா சாமிய அழகுனு சொல்லக்கூடாதானு எதிர்க்கேள்வி எழுப்புவேன்..!!


நான் முகநூலில் இந்த படங்களை பகிர்ந்த பொழுது தோழிகளின் கமெண்ட் மேலே கூறியிருக்கும் என் சிறு பிராயத்திற்கு இட்டுச் சென்று திரும்பியது :)).
நிலாவில் பாட்டி நூல் நூக்குறாங்கனு கேட்டே வளர்ந்த எனக்கு, இந்த படங்களை எடுத்து முடித்து பார்த்த பொழுது, எத்தன நாள் இதனை நாம் நம்பி இருக்கோம்.
ஆனா இப்பலாம் இதைச் சொன்னா எந்த குழந்தையாவது நம்புமா? என்ற என் அறியாமையும் நினைவு வந்து போனது.
நிஜமாலுமே இது நிலாதாங்க!! பார்க்க சூரியன் போலவே பிரகாசிக்கிறது!!

மகிழம்பூ மரத்தினிடையில் கண்ணாமூச்சி ஆடும் நிலா!!




மரத்துக்கிடையில் பால்நிலா வெளிச்சம்!!

காலை நிலவு!!

பிறை நிலா!! நல்லா உத்து பாருங்க..சிறு சிறு குழிகள் தென்படும்!!!

எடுக்கும் போது கை நடுங்கிடுச்சு..

வெட்டி எடுத்த கேக் துண்டம் போல ஸ்பாஞ்சியா இருக்கு!!



 நிலவில் பிளாஹ் பேர் பொறித்த பெருமையை இத்துடன் நிப்பாட்டுகிறேன்!!

                                                        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

காலம் அனைத்தையும் வென்று விடும்; எனவே நேரத்துக்கு பணிந்து கடமை புரியுங்கள்.

                                                            _((()))_

2 கருத்துகள்:

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்