வியாழன், 23 ஜூலை, 2015

நிலக்கடலை சுண்டல்/ வேர்க்கடலை சுண்டல்/ Peanut Sundal





பச்சக் கல்லக்காயை பறித்து வேகவைத்து சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான். ஆனால் எல்லா பருவங்களிலும் பச்சக்கல்லக்காய் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளாகத்தான் பச்சையாக இருக்கும். பிறகு காயவைத்து விடுவார்கள். இல்லையேல் பூஞ்சாணம் பிடித்து காய்கள் கெட்டுப்போய்விடும்.

அதுக்காக பச்சக்கல்லை சாப்பிடும் ஆசை போய்விடுமா என்ன?
வருடம் பூராவும் பச்சக்கல்லை சாப்பிடணுமா? (இது ஏதோ மரகதக் கல், மாணிக்ககல்னு நினைக்கப்படாது. கடலைக்காயை நாங்கெளாம் கல்லக்காய்னுதான் சொல்வோம்.)
அதுக்கு ஒரே வழிதாங்க இருக்கு, காயவெச்ச வேர்க்கடலை பருப்புகளை குறைந்தது 4 மணிநேரம் நீரில் ஊறவைத்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுத்தா வேகவைத்த வேர்க்கடலை தயார்!!
95% அதே ருசி கிடைத்து விடுகிறது. என்னக்கேட்டா 100/100 அதே ருசினு சொல்வேன்.
ஆனா பச்சக்கடலைய பலவிதமா ஆராய்ச்சி பண்ணி சாப்பிட்டதில ஊசி போடாத மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு அதில்  5%  குறைவாகத்தான் தெரி(து)யும்!!

சரி வாங்க படத்துடன் கூடிய குறிப்புக்கு போவோம்:



இந்த கப்லருந்து அப்பிடியே வேர்க்கடலைய எடுத்து ஒவ்வொண்ணா வாயில போட்டுக்கிட்டே வந்தா குறிப்பு  வ(வெ)ந்துடும்.







 நான் வாங்கியது ஔவை பிராண்ட் நிலக்கடலை, நல்லாவே சுத்தம் செய்து தரமான நிலக்கடலைகளாவே விற்பனை செய்கிறார்கள். ஒரு பாகெட்ல ஒரு சொத்த கடலை கூட இல்லீங்!!


 கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு ஊறவைக்கவும்.

நல்லா ஊறிடுச்சு பாருங்க!!

ஊறின கடலையை குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு, 1/2 தேக்கரண்டி கல் உப்பு 4 லிருந்து 5 விசில் விட்டு வேகவைக்க வேண்டும்.
வெந்த பிறகு அதிலிருக்கு நீரினை இருத்துவிட வேண்டும்.
படங்கொஞ்சமல்ல நிறையவே ஆடிடுச்சு
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன் கடலெண்ணய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.

பொடியாக நறுக்கிய  இரண்டு மிளகாய்பழம்,  10 சின்ன வெங்காயம், 2 இணுக்கு கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

 வதங்கும் பொழுதே சிறிது உப்பு (பொடி உப்பு) ஏற்கனவே கல் உப்பு போட்டிருக்கு, ஆதலால் தேவைக்கு போடவும். அதிகமாகிவிடும் வாய்ப்புள்ளது. கூடவே அரை தேக்கரண்டி அளவு சாட் மசாலா போட்டு வதக்கி, வேகவைத்த கடலையைப் போட்டு கிளறிவிடவும்.
பின்பு  துருவிய அரைமூடி தேங்காயைப் போட்டு நன்கு கிளறிவிடவும்.
 தேங்காய் போட்ட பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்க வேண்டாம். எப்பொழுதும் தேங்காய் பச்சையாக சாப்பிட்டால் நல்லது. அதுவே வறுத்து சாப்பிடும் பொழுது உடலில் கொழுப்பு தங்கும் வாய்ப்புள்ளது.


 சூடான சுவையான வேர்க்கடலை சுண்டல் தயார்!!

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றதொரு சத்துள்ள உணவு.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

உண்மையை நேசி; பிழையை மன்னித்து விடு.

                                                                   _((()))_

3 கருத்துகள்:

  1. அருமை! எனக்கும் அவித்த நிலக்கடலை பிடிக்கும். உங்கள் படங்கள்... பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது அருள். அடுத்த தடவை கடலையைக் காணும் போது வாங்கிச் சமைத்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி இமா :) சமைத்து பாருங்கள், நிச்சயம் பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
  3. குக்கர்ல வைக்கச் சொன்னதைக் கவனிக்கல. ;) சும்மாவே அவிச்சு சாப்பிட்டாச்சு. நல்லாவேதான் இருந்துது. அடுத்த தடவை நினைவா ப்ரெஷர் குக்கர்ல போடுறேன்.

    பதிலளிநீக்கு

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்