திங்கள், 27 ஜூலை, 2015

உயர்திரு.Dr.A.P.J. அப்துல்கலாம் ஐயா!!



பாரதத்தாயின் மணிமகுடத்திலிருந்து ஒரு இரத்தினம் தன் அக்னி சிறகினை மெல்ல விரித்து பறந்து சென்று வானத்து நட்சத்திரமாய் மாறிவிட்டது :((( 

கனவு காணுங்கள் அக்கனவினை மெய்ப்படச் செய்யுங்கள் என இலட்சோப இலட்சம் மாணவர்களுக்கு எழுச்சியூட்டிய கனவு நாயகன் இன்று உறங்கச் சென்றுவிட்டார்.
அவரின் கனவுக்கு முழுவடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பினை இன்றைய இளம் குருத்துக்களிடம் விட்டுச்சென்றுள்ளார்.
அவரின் கனவு மெய்ப்படச் செய்ய வேண்டிய கடமை அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் உண்டு!!

குடியரசு தலைவரின் மாளிகை என்பது சாமான்ய மக்களுக்கு தூரத்து காட்சியே என்ற நிலையை மாற்றியவர்.
நேர்மை, எளிமை, உற்சாகம் இவற்றின் ஊற்றுக்கண்ணாய் விளங்கியவரின் உடல் துயிலுற்றாலும், ஆன்மா விழித்துக்கொண்டும் செயலாற்றிக் கொண்டும்தான் இருக்கும்.

பிறப்பென்றிருந்தால் இறப்பும் உண்டு, ஆனால் அந்த நிகழ்வு அனைவருக்கும் ஒவ்வொருவிதத்தில் அமையும்.
தங்களின் உயிர் பிரியும் தருவாயிலும், தாங்கள் ஆற்றிய கடமையை காலம் என்றென்றும் மறவாது.

தங்களுக்கு எங்களின் வீரவணக்கம் ஐயா!!





                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்வது!!

-- Dr. A.P.J. அப்துல்கலாம்

                                              _((((())))))_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்