மாங்கா தொக்கு செய்வது மிகவும் எளிது!!
தேவையான பொருட்கள்:
கிளிமூக்கு மாங்காய்.......1(பெருசு)
வெந்தயம்............. 2தேக்கரண்டி
வெல்லம்...............1தேக்கரண்டி
மிளகாய் தூள்...... 1மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)
பெருங்காயப்பொடி.... ஒரு சிட்டிகை ( பெருவிரலும், ஆட்காட்டி விரலும் சேர்ந்து எடுக்கும் அளவு) அதுக்காக கைலயேதான் அளவு எடுக்கணும்னு நினைக்காம, சும்மா பெருங்காய டப்பாவ ஒரு குலுக்கு குலுக்கினா போதும்..சில்லர காசு விழுற அளவுக்கு ஓட்டை போட்டு வெச்சிருந்தா நிச்சயம், சிட்டிகையா போடுவதுதான் சாலச்சிறந்தது)
உப்பு.... தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணய்.......3 மேசைக்கரண்டி (ஊத்துனவரைக்கும் சீக்கிரமா கெடாம இருக்கும்)
கடுகு......1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை.......2 இணுக்கு
செய்முறை:
கிளிமூக்கு மாங்காயை தோல் சீவி, காய்சீவியில் மெலிதாக துருவிக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து மிதமாக சூடாக்கி, அதில் வெந்தயத்தைப் போட்டு பொன்நிறமாக வறுக்கவும். வெந்தயத்தின் நிறமே பொன்நிறம்தான்லாம் சொல்லக்கூடாது.
வறுத்த வெந்தயத்தை தனியே எடுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
அதே வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு பொரிந்தவுடன், மாங்காயைப் போட்டு வதக்கவும்.
தேவையான அளவு உப்பு போட்டு மிளகாய் பொடி சேர்க்கவும்.
மாங்காய் ஓரளவு வெந்து வரும்பொழுது வெந்தயப்பொடி சேர்க்கவும்.
நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். வெல்லத்தை சேர்த்து விழுது நன்கு வெந்து சுருள வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.
இந்த விழுதினை ஆறியவுடன் சுத்தமான, ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டால் இருபது நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
எண்ணைய் ஊற்றுவதைப் பொறுத்தே இதன் பயன்பாடு இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
ஈரமில்லாத கரண்டியினை பயன்படுத்த வேண்டும். கைபடாமல் இருக்கவேண்டும்.
தயிர்சாதம், கலந்த சாதம் ஏன் அவ்வப்பொழுது ஊட்டுக்கார் வெளியூர் கிளியூர் போயிருந்தா, குழம்பு வெக்க மொடையா இருந்தா தோசைக்கு, சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்புடலாம்.
இந்த தொக்குக்கு கிளிமூக்கு மாங்காயா இருந்தாதான் நல்லா இருக்கும். (அதுவும் பழுக்காம பச்சக்காயா இருக்கோணு) குண்டு மாங்கா அவ்வளவா நல்லா இருக்காது. கிளிமூக்கு மாங்கா புகைப்படம் எடுக்காம விட்டுட்டேன் :( சீவினப்புறம்தான் பிளாஹ்ல போடற ஞாபகமே வந்துச்சு.
ஆனா என்ன கிளிமூக்கு மாம்பழம் இருக்கே!!:)
நல்லணெயேதான் ஊத்தணுமா!! (பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வாணுமா??)
அப்பிடீலாம் இல்லீங்.... உங்குளுக்கு எந்தெண்ணை கெடைக்குமோ அதையே ஊத்தலாம் (அரிக்கேன் லைட்டுனாலும் பரவாலதான்!!)
என்னையாட்டம் பெருங்காயம் போட மறந்துட்டாலும் பரவாலீங்..சாமி கண்ணக்குத்தாது.. கோழி கொத்தாது...மாடு இடிக்காது (முட்டாது)!!
20 நாளு கேரண்டி கொடுத்தேனு அதையே நம்பிட்டு, ஃப்ரிட்ஜ்ல வெக்காம வெளிய வெச்சா பூசணம் (பூஞ்சாணம் யாருங்க அவர்.. எந்தூரு சனம்லாம் கேட்கப்படாது.. (ஃப்ங்கை) புடுச்சுடும்!!
கிளிமூக்கேதானா (மீண்டும் பெட்ரோமாக்ஸேதானா!!) எந்த பச்ச மாங்கா கெடைக்குதோ அதைய வெச்சு சோதனை பண்லாம் தப்பே இல்ல!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
கோபம் எனும் கொடிய அமிலம்; அது விழும் இடத்தை விட, இருக்கும் இடமே பெரிதும் நாசமாகும்.
_((()))_
அப்பப்பா... நாக்கு ஊறுது அருளுளு... அருள் :))
பதிலளிநீக்குஎனக்கு ஒரு பாட்டில் பார்சல் ப்ளீஸ்ஸ்ஸ்
ஹா!! ஹா!! ஊறுகாபார்சல் வந்துட்டே இருக்கு :) நன்றி வாணி :)
பதிலளிநீக்கு