சனி, 4 ஜூலை, 2015

மொறு மொறு வெண்டக்கா



மொறு மொறு வெண்டக்கா செய்வது மிகவும் எளிது. 

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்.........15

மிளகாய்தூள்...........1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

கரம்மசாலா பொடி.......1/2 தேக்கரண்டி

உப்பு...............தேவையான அள்வு

க்டலை மாவு....... 2 தேக்கரண்டி

கடலை எண்ணைய்... பொரிப்பதற்கு தேவையான அளவு

கறிவேப்பிலை........ 4 இணுக்கு

செய்முறை:

வெண்டைக்காய்களை சுத்தமாக கழுவி, காம்பு மற்றும் நுனிப்பகுதியை வெட்டவும்.

காம்பு மற்றும் நுனி நீக்கிய காயினை இரண்டாக வெட்டி, பிறகு சன்னமாக நீளவாக்கில் வெட்டவும். 

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு பொடி வகைகளை போடவும். உப்பு சேர்க்கவும்.
பின்னர் கடலை மாவினை போட்டு நன்கு பிசறி விடவும். கடலை மாவினை அப்படியே கொட்டாமல் பிசறிக் கொண்ட்டே போடவும். தேவைக்கு அதிகமாக தெரிந்தால் நிறுத்திக் கொள்ளவும். 

ஒரு துளி கூட நீர் சேர்க்க தேவையில்லை.

அடுப்பில் வாணலியை வைத்து சூடேறியவுடன் கடலை எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், பிசறிய வெண்டைக்காய்களை போட்டு பொரித்தெடுக்கவும்.

எல்லாவற்றையும் பொரித்த பின்பு, அடுப்பை நிறுத்தி விட்டு, சூடான எண்ணையில் கறிவேப்பிலையை உருவிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பொரித்தவற்றை வெண்டைக்காயின் மேல் தூவி அலங்கரிக்கவும்.












கறிவேப்பிலை போடாமலும் செய்யலாம்.
சூடான மொறு மொறுப்பான வெண்டக்காய் தயார்.

தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். அப்படியேயும் சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

பின் குறிப்பு:

வெண்டைக்காயின் விதைகளை நீக்கிவிடுவது நல்லது, ஏனெனில் எண்ணையில் பொரியும் போது வெடித்து வெடித்து சிதறும் அபாயம் உண்டு.

சிறிது புளிப்புடன் கூடிய சுவை விரும்புபவர்கள் அரை மூடி எலுமிச்சையை பிசிறும் போது பிழிந்து விடலாம்.

கட்டாயம் அடுப்பை அணைத்த பிறகே கறிவேப்பிலையை பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையில் உள்ள நீரினால் எண்ணைய் சடி புடி என வெடிக்கும். பொங்கும் அபாயமும் உண்டு.

காரம் எச்சா வேணும்னா மிளாகாய் பொடியை கூடுதலாக்கவும்.

                                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது::

ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது.
"ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய். ஆனால் அத்தேனை மனிதன் உன்னிடம் இருந்து திருடி விடுகிறான்". அதற்காக நீ வருந்துவதில்லையா?,   அதற்கு அந்த தேனீ பதிலளித்தது "
இல்லெவே இல்லை" ஏனென்றால் மனிதன் என்னிடம் இருந்து தேனை மட்டும்தான் திருட முடியும். தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் திருட முடியாது". 

                                                                   _((()))_

2 கருத்துகள்:

  1. தயிர் சாதமும் , மொறுமொறு வெண்டைக்காயும் என்னோட ஃபேவரிட், கலக்கல் காம்பினேஷனும் கூட. கறிவேப்பிலையத்தான் இங்கு தடை பண்ணிட்டாங்க. உங்க வீட்டுக்கு வரும்போது நான் வரும் போது கட்டாயம் செய்து தரணும். சரியா பெண்ணே :)))

    பதிலளிநீக்கு
  2. என்னது கறிவேப்பிலைக்கு தடையா?? கசகசா சில நாடுகளில் தடை செய்யப்பட்டதுனு அறிஞ்சிருக்கேன். கறிவேப்பிலைக்கு தடைனு இப்பதான் தெரிஞ்சுக்கிறேன்!.
    செய்துதர காத்துட்டு இருக்கோம் வாங்கோ வாங்கோ:) கறிவேப்பிலை செடியாருந்து இப்ப வளர்ந்து மரமாகிட்டு வருது. அன்பான பதிவிற்கு மிக்க நன்றி வாணி :)

    பதிலளிநீக்கு

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்