டபுள் பீன்ஸ் மற்றும் பட்டர் பீன்ஸை தோலுரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் வகைகள்.......1 கப்
துவரம் பருப்பு.......1 1/2 கப்
சாம்பார் தூள்.........1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்.........1 தேக்கரண்டி
புளி.........பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்.....20 எண்ணிக்கை
தக்காளி........1
பச்சமிளகாய் அல்லது வறமிளகாய்......2 (காரத்திற்கேற்ப)
கறிவேப்பிலை......2 இணுக்கு
உப்பு........தேவையான அளவு
கடலெண்ணைய்......தாளிக்க
கடுகு, கடலைப் பருப்பு
செய்முறை:
துவரம் பருப்பை 3 முறை கழுவி குக்கரில் மூழ்கும் வரை நீர் விடவும்.
பீன்ஸ் வகைகளை போடவும். சாம்பார் தூள் எடுத்த அளவில் பாதி போடவும்.
மஞ்சள் தூள் சேர்க்கவும்.
மிகவும் சிறிய குக்கராக இருப்பின் தீயினை குறைவாக வைத்து வேகவிடவேண்டும். இரண்டு விசில் விடவேண்டும்.
பெரிய குக்கராக(5 லிட்டர்) இருப்பின் தீயினைக்கூட்டி வைத்து 3 விசில் விடலாம்.
புளியை வெது வெதுப்பான நீரினை மூழ்கும் வரை ஊற்றி ஊறவிடவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி குறுக்கு வாட்டில் இரண்டாக வெட்டவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பச்சை அல்லது வற மிளகாயை அரிந்து விதைகளை அகற்றி வைக்கவும்.
குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானவுடன் கடலெண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.
முதலில் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் புளியை நன்கு கரைத்து, சக்கைகளை அகற்றி நீரை மட்டும் ஊத்தவேண்டும்.
மீதி இருக்கும் சாம்பார் பொடி போடவும்.
வெந்த பருப்பினை ஊற்றி தேவையான அளவு நீர் விட்டு உப்பு போட்டு சரி பார்க்கவும்.
சாம்பார் நன்கு கொதிக்க விடவும்.மல்லி தழை தூவி அடுப்பை நிறுத்தவும்.
சுவையுடன் கூடிய நல்ல மணமான சாம்பார் தயார். நெய் சேர்த்து பரிமாறவும்.
இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள உகந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
ஒரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய கடுமையான தண்டனை, அவனால் புரிந்து கொள்ள இயலாத காரியத்தை கட்டாயப்படுத்தி செய்யச்சொல்வது தான்.
காந்தியடிகள்.
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்